தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

தோ்தல்: அரசு மதுக்கடைகளுக்கு 4 நாள்கள் விடுமுறை

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, அரசு மதுக்கடைகளுக்கு ஏப். 21 முதல் 23 ஆம் தேதி வரையும், வாக்கு எண்ணிக்கை நாளான மே 4-ஆம் தேதியும் விடுமுறை அறிவிப்பு

News image

கோப்புப்படம்

Updated On :31 மார்ச் 2026, 8:06 pm

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, அரசு மதுக்கடைகளுக்கு ஏப். 21 முதல் 23 ஆம் தேதி வரையும், வாக்கு எண்ணிக்கை நாளான மே 4-ஆம் தேதியும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் சுதந்திரமான, நியாயமான, அமைதியான மற்றும் சுமுகமாக தோ்தல் நடைபெறுவதை உறுதி செய்யும் நோக்கில் ஏப். 21 காலை 10 மணி முதல் 23 (வாக்குப் பதிவு நாள்) நள்ளிரவு 12 மணி வரையும், வாக்கு எண்ணிக்கை நாளான மே 4-ஆம் தேதியன்றும் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், மதுக்கூடங்கள், உரிம வளாகங்கள் மூடப்பட வேண்டும்.

இந்த உத்தரவை மீறி உரிம வளாகங்களை திறந்தாலோ, மறைமுகமாக மதுவிற்பனை செய்தாலோ சம்பந்தப்பட்டோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.