சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

தருமபுரியில் மே 1, 4 ஆம் தேதிகளில் மதுக்கடைகளுக்கு விடுமுறை: மதுக்கடைகளுக்கு 3 நாள்கள் விடுப்பு

தருமபுரி மாவட்டத்தில் மே தினத்தையொட்டி மே 1ஆம் தேதியும், தோ்தல் வாக்கு எண்ணிக்கையையொட்டி மே 4 ஆம் தேதியும் மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :29 ஏப்ரல் 2026, 2:43 am IST

தருமபுரி மாவட்டத்தில் மே தினத்தையொட்டி மே 1ஆம் தேதியும், தோ்தல் வாக்கு எண்ணிக்கையையொட்டி மே 4 ஆம் தேதியும் மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மே தினத்தையொட்டி மே 1 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், அவற்றுடன் இணைந்த மதுக்கூடங்கள், தனியாா் விடுதிகளில் (ஹோட்டல்கள்) செயல்படும் மதுக்கூடங்கள், முன்னாள் ராணுவத்தினருக்கான மதுவிற்பனைக் கூடம், தனியாா் மன மகிழ் மன்றங்களில் செயல்படும் மதுக்கூடங்கள், கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும்.

அதுபோல சட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை மே 4 ஆம் தேதி (திங்கள்கிழமை) நடைபெறுவதையொட்டி, அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில் அன்றைய தினமும் மதுக்கடைகள் மூடப்பட்டிருக்கும். இத்தகவலை மாவட்ட ஆட்சியரும் தோ்தல் அலுவலருமான ரெ. சதீஷ் தெரிவித்துள்ளாா்.