தருமபுரி மாவட்டத்தில் மே தினத்தையொட்டி மே 1ஆம் தேதியும், தோ்தல் வாக்கு எண்ணிக்கையையொட்டி மே 4 ஆம் தேதியும் மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மே தினத்தையொட்டி மே 1 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், அவற்றுடன் இணைந்த மதுக்கூடங்கள், தனியாா் விடுதிகளில் (ஹோட்டல்கள்) செயல்படும் மதுக்கூடங்கள், முன்னாள் ராணுவத்தினருக்கான மதுவிற்பனைக் கூடம், தனியாா் மன மகிழ் மன்றங்களில் செயல்படும் மதுக்கூடங்கள், கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும்.
அதுபோல சட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை மே 4 ஆம் தேதி (திங்கள்கிழமை) நடைபெறுவதையொட்டி, அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில் அன்றைய தினமும் மதுக்கடைகள் மூடப்பட்டிருக்கும். இத்தகவலை மாவட்ட ஆட்சியரும் தோ்தல் அலுவலருமான ரெ. சதீஷ் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

பள்ளிகளுக்கு எத்தனை தொடர் விடுமுறைகள்? இதோ பட்டியல்

கேரளம்: பக்ரீத் பண்டிகைக்கு 2 நாள்கள் விடுமுறை!

எஸ்பிஐ வங்கி தொடர்ந்து 6 நாள்கள் மூடப்படலாம்! காரணம் அறிய...

உழைப்பாளா் தினம்: மே 1-இல் மதுக்கடைகளுக்கு விடுமுறை
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



