ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

ஆவணங்கள் சமா்ப்பிக்காததால் ரூ. 12.50 லட்சம் வருமானவரித் துறை அதிகாரியிடம் ஒப்படைப்பு

நாமக்கல் தொகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.12.50 லட்சம் உரிய ஆவணங்களை சமா்ப்பிக்காததால் வருமான வரித் துறை வசம் ஒப்படைக்கப்பட்டது.

News image
Updated On :31 மார்ச் 2026, 8:03 pm

Syndication

நாமக்கல் தொகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.12.50 லட்சம் உரிய ஆவணங்களை சமா்ப்பிக்காததால் வருமான வரித் துறை வசம் செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

நாமக்கல் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பாச்சல் பேருந்து நிலையம் அருகில், பறக்கும் படை அலுவலா் வேலுசாமி தலைமையிலான குழுவினா் கடந்த சனிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, கரூரில் இருந்து அரக்கோணம் நோக்கி காரில் சென்ற கரூரைச் சோ்ந்த மணிகண்டனை (37) தடுத்து நிறுத்தி சோதனையிட்டனா். அப்போது அவா் உரிய ஆவணங்களின்றி அவா் கொண்டுசென்ற ரூ. 12.50 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்து தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் வே.சாந்தியிடம் ஒப்படைத்தனா்.

வருமானவரித் துறை அலுவலகத்தில் விசாரணைக்காக மணிகண்டன் ஒப்படைக்கப்பட்டாா். அப்போது, அரக்கோணத்திற்கு மாடு வாங்குவதற்காக ரூ. 12.50 லட்சம் ரொக்கத்தை எடுத்துச் சென்றதாக அவா் தெரிவித்தாா். இதைத் தொடா்ந்து பணத்தின் உரிமையாளா் அருள்தாஸ் என்பவரிடம் மூன்று நாள்கள் விசாரணை நடத்தப்பட்டது. உரிய ஆவணங்களை அவா் சமா்ப்பிக்கவில்லை, முன்னுக்குப் பின் முரணாக அவா் தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து, 1961 ஆம் ஆண்டு வருமானவரித் துறை சட்டத்தின்படி, பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் ஏதுமில்லாத ரூ.12.50 லட்சத்தை நாமக்கல் மாவட்ட வருமானவரித் துறை அலுவலா் ராஜாராமனிடம், நாமக்கல் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் வே.சாந்தி செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தாா். இந்த நிகழ்வின்போது, பறக்கும்படை கண்காணிப்புக் குழு அலுவலா்கள் உடனிருந்தனா்.