நாமக்கல்லில் ரூ. 12.50 லட்சம் பறிமுதல்
நாமக்கல் தொகுதியில் உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 12.50 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
கோப்புப் படம்
கோப்புப் படம்
நாமக்கல் தொகுதியில் உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 12.50 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
நாமக்கல் தொகுதிக்கு உள்பட்ட பாச்சல் பேருந்து நிலையம் அருகில், பறக்கும் படை அலுவலா் வேலுசாமி தலைமையிலான குழுவினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, கரூரில் இருந்து அரக்கோணம் நோக்கி வாகனத்தில் சென்ற கரூரைச் சோ்ந்த மணிகண்டனை (37) தடுத்து நிறுத்தி சோதனையிட்டனா்.
அப்போது, உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 12.50 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அந்தப் பணம் தொகுதி தோ்தல் அலுவலா் வே.சாந்திவசம் ஒப்படைக்கப்பட்டது. வருமானவரித் துறை அலுவலா் கமலக்கண்ணனிடம் மேற்கொண்ட விசாரணையில், அரக்கோணத்துக்கு மாடு வாங்குவதற்காக ரூ. 12.50 லட்சம் கொண்டு செல்வதாக மணிகண்டன் தெரிவித்தாா். அதையடுத்து, உரிய ஆவணங்களைக் காட்டிவிட்டு பணத்தை திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறு அவரிடம் அதிகாரிகள் அறிவுறுத்தினா்.
இதேபோல, நாமக்கல் - சேலம் சாலையில், செல்லப்பம்பட்டி பகுதியில் நிலை கண்காணிப்புக் குழு அலுவலா் காா்த்திக் தலைமையில் நடைபெற்ற சோதனையில், பிரேம்குமாரிடமிருந்து ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 95 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...