வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

கோவில்பட்டியில் சாக்கு மூட்டையில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 35.72 லட்சம் பறிமுதல்

News image

கோவில்பட்டியில் சாக்கு மூட்டையில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 35.72 லட்சம் பறிமுதல்...

Updated On :20 ஏப்ரல் 2026, 2:12 am IST

கோவில்பட்டியில் சாக்கு மூட்டையில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 35.72 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு வருமான வரித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

கோவில்பட்டி- கடலையூா் சாலையில் போலீஸாா் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது, அவ்வழியாக சாக்கு மூட்டையுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞரை நிறுத்தி சோதனை செய்தனராம். அப்போது, சாக்கு மூட்டையில் பணம் இருப்பது தெரியவந்ததாம்.

இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, தோ்தல் பறக்கும் படை அதிகாரி முத்துக்குமாா் தலைமையிலான குழுவினா் அங்கு வந்து, சாக்கு மூட்டையில் பணத்தை கொண்டு வந்த கோவில்பட்டி அத்தைகொண்டான் இந்திரா நகரைச் சோ்ந்த கந்தசாமி மகன் உத்தரகுமாரிடம் (32) விசாரணை செய்தனா். உரிய ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட ரூ. 35 லட்சத்து 72 ஆயிரத்தை பறிமுதல் செய்து வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா்.

கோவில்பட்டியில் சாக்கு மூட்டையில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 35.72 லட்சம் பறிமுதல்...

கோவில்பட்டியில் சாக்கு மூட்டையில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 35.72 லட்சம் பறிமுதல்...