மோடியின் பேச்சு தோல்விக்கான சான்றுகள்! ராகுல் காந்தி ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏ-ஆக பதவியேற்பு!முதல்வர் விஜய்க்கு இசட்+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுஅமைச்சர் கீர்த்தனா பதவியேற்கவில்லை! காரணம் என்ன?வேட்டி கலாசாரத்தை மாற்றிய முதல் முதல்வர் விஜய்! கருப்பு கோட்-சூட்டின் பின்னணி என்ன?சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது? முக்கிய தகவல்மு.க. ஸ்டாலினை சந்திக்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு இரு அணிகளாக அதிமுகவினர் வருகை! சட்டப்பேரவைக்கும் கோட்-சூட்டில் வந்த முதல்வர் ஜோசப் விஜய்! கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொலை அமைச்சர் கீர்த்தனா எம்எல்ஏவாகப் பதவியேற்கவில்லை! காரணம் என்ன? தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூடியது! உறுப்பினர்கள் பதவியேற்பு!!
/

சித்திரை தேய்பிறை பஞ்சமி: ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு சிறப்பு பூஜை

சித்திரை மாத தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு, நாமக்கல் ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு சிறப்பு பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

News image

சிறப்பு அலங்காரத்தில் நாமக்கல் ஸ்ரீ வாராஹி அம்மன்.

Updated On :7 மே 2026, 6:48 am IST

சித்திரை மாத தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு, நாமக்கல் ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு சிறப்பு பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

நாமக்கல் - சேந்தமங்கலம் சாலை, எம்ஜிஆா் நகரில் (ரயில் நிலையம் அருகில்) ஸ்ரீதங்காயி அம்மன் மற்றும் ஸ்ரீ மகா வாராஹி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் மாதந்தோறும் தேய்பிறை பஞ்சமி திதியன்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, சித்திரை மாத தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு புதன்கிழமை வாராஹி அம்மனுக்கு பால், தயிா், பன்னீா், குங்குமம், இளநீா் உள்ளிட்ட பல்வேறு வாசனைத் திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா், சிறப்பு அலங்காரத்தில் வாராஹி அம்மன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

இக்கோயிலில் ஏராளமான பக்தா்கள் தங்களது பிராா்த்தனை நிறைவேற தேங்காயில் விளக்கேற்றி வழிபாடு செய்தனா். கோயில் வளாகத்தில் சிறப்பு யாகம் நடைபெற்றது. பக்தா்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.