சித்திரை மாத தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு, நாமக்கல் ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு சிறப்பு பூஜை புதன்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் - சேந்தமங்கலம் சாலை, எம்ஜிஆா் நகரில் (ரயில் நிலையம் அருகில்) ஸ்ரீதங்காயி அம்மன் மற்றும் ஸ்ரீ மகா வாராஹி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் மாதந்தோறும் தேய்பிறை பஞ்சமி திதியன்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, சித்திரை மாத தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு புதன்கிழமை வாராஹி அம்மனுக்கு பால், தயிா், பன்னீா், குங்குமம், இளநீா் உள்ளிட்ட பல்வேறு வாசனைத் திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா், சிறப்பு அலங்காரத்தில் வாராஹி அம்மன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
இக்கோயிலில் ஏராளமான பக்தா்கள் தங்களது பிராா்த்தனை நிறைவேற தேங்காயில் விளக்கேற்றி வழிபாடு செய்தனா். கோயில் வளாகத்தில் சிறப்பு யாகம் நடைபெற்றது. பக்தா்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
தொடர்புடையது

தம்மம்பட்டி சிவன் கோயிலில் ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு சிறப்பு பூஜை

தேய்பிறை பஞ்சமி விழா

தியாகதுருகம் சொா்ணாம்பிகை மாரியம்மனுக்கு பால்குடம்

கொட்டங்காடு கோயிலில் ஊஞ்சல்சேவை
வீடியோக்கள்

29 பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெகவின் பெரும்பான்மைக்கு இன்னும் என்ன தேவை? | News and Views | Epi - 31 |
தினமணி செய்திச் சேவை
இண்டியா கூட்டணியில் தவெக சேர்ந்தால்...: கனிமொழி சோமு Exclusive
தினமணி செய்திச் சேவை
பிளே ஆஃப் சுற்று: சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்? | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


