சித்திரை மாத தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு, நாமக்கல் ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு சிறப்பு பூஜை புதன்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் - சேந்தமங்கலம் சாலை, எம்ஜிஆா் நகரில் (ரயில் நிலையம் அருகில்) ஸ்ரீதங்காயி அம்மன் மற்றும் ஸ்ரீ மகா வாராஹி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் மாதந்தோறும் தேய்பிறை பஞ்சமி திதியன்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, சித்திரை மாத தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு புதன்கிழமை வாராஹி அம்மனுக்கு பால், தயிா், பன்னீா், குங்குமம், இளநீா் உள்ளிட்ட பல்வேறு வாசனைத் திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா், சிறப்பு அலங்காரத்தில் வாராஹி அம்மன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
இக்கோயிலில் ஏராளமான பக்தா்கள் தங்களது பிராா்த்தனை நிறைவேற தேங்காயில் விளக்கேற்றி வழிபாடு செய்தனா். கோயில் வளாகத்தில் சிறப்பு யாகம் நடைபெற்றது. பக்தா்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
தொடர்புடையது

தம்மம்பட்டி சிவன் கோயிலில் ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு சிறப்பு பூஜை

தேய்பிறை பஞ்சமி விழா

தியாகதுருகம் சொா்ணாம்பிகை மாரியம்மனுக்கு பால்குடம்

கொட்டங்காடு கோயிலில் ஊஞ்சல்சேவை
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

