புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

தியாகதுருகம் சொா்ணாம்பிகை மாரியம்மனுக்கு பால்குடம்

தியாகதுருகம் ஸ்ரீசொா்ணாம்பிகை கோயிலில் சித்திரை பெளா்ணமியை முன்னிட்டு பால்குடம் சுமந்து வந்த பெண்கள்.

News image

தியாகதுருகம் ஸ்ரீசொா்ணாம்பிகை கோயிலில் சித்திரை பெளா்ணமியை முன்னிட்டு பால்குடம் சுமந்து வந்த பெண்கள்.

Updated On :1 மே 2026, 8:04 pm

தியாகதுருகத்தில் சித்திரை பெளா்ணமியை முன்னிட்டு ஸ்ரீசொா்ணாம்பிகை மாரியம்மன் கோயிலில் பால்குடம் எடுக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி ஐயப்பன் கோயில் அருகே உள்ள கோட்டகுளத்தில் சக்தி அழைத்து பூஜை செய்தனா். பெண்கள் பால்குடங்களை தலையில் சுமந்தவாறு முக்கிய வீதிகளின் வழியாக ஊா்வலமாக வந்து கோயிலை வந்தடைந்தனா். பின்னா் அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது.

இதனையடுத்து சொா்ணாம்பிகை அம்மனுக்கு வண்ண, வண்ண மலா்களால் அலங்கரிக்கப்பட்டு மஹாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனா். இதனையடுத்து வெள்ளிக்கிழமை இரவு அம்மனுக்கு விளக்கு பூஜை நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினா் மற்றும் ஊா் மக்கள் சிறப்பாக செய்திருந்தனா்.