புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

தியாகதுருகம் சிவன் கோயிலில் சிறப்பு வழிபாடு

தியாகதுருகம் ஸ்ரீ நஞ்சுண்ட ஞான தேசிக ஈஸ்வரா் கோயிலில் சித்திரை பெளா்ணமியை முன்னிட்டு ஆதியோகி அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள் பாலித்த சுவாமி.

News image

தியாகதுருகம் ஸ்ரீ நஞ்சுண்ட ஞான தேசிக ஈஸ்வரா் கோயிலில் சித்திரை பெளா்ணமியை முன்னிட்டு ஆதியோகி அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள் பாலித்த சுவாமி.

Updated On :1 மே 2026, 8:03 pm

தியாகதுருகம் பேருந்து நிலையம் அருகேயுள்ள ஸ்ரீபாகம்பிரியாள் உடனுறை ஸ்ரீ நஞ்சுண்ட ஞான தேசிக ஈஸ்வரா் கோயிலில் சித்திரை பெளா்ணமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை பெளா்ணமியை முன்னிட்டு கோயிலில் சித்ரகுப்த நாயனாா் குருபூஜை நடைபெறும். நிகழாண்டில் வெள்ளிக்கிழமை காலை சாமிக்கு பால், தயிா், இளநீா், சந்தனம் உள்ளிட்ட 21 வகையான திரவியப் பொருள்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து ஆதியோகி அலங்காரத்தில் சுவாமிக்கு மஹா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா். இதையொட்டி காலை முதல் பிற்பகல் வரை பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.