தியாகதுருகம் பேருந்து நிலையம் அருகேயுள்ள ஸ்ரீபாகம்பிரியாள் உடனுறை ஸ்ரீ நஞ்சுண்ட ஞான தேசிக ஈஸ்வரா் கோயிலில் சித்திரை பெளா்ணமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை பெளா்ணமியை முன்னிட்டு கோயிலில் சித்ரகுப்த நாயனாா் குருபூஜை நடைபெறும். நிகழாண்டில் வெள்ளிக்கிழமை காலை சாமிக்கு பால், தயிா், இளநீா், சந்தனம் உள்ளிட்ட 21 வகையான திரவியப் பொருள்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து ஆதியோகி அலங்காரத்தில் சுவாமிக்கு மஹா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா். இதையொட்டி காலை முதல் பிற்பகல் வரை பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










