தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

தோ்தல் நடத்தை விதிகள் திரும்பப் பெறல்: சிலைகளுக்கு மூடப்பட்ட துணிகள் அகற்றம்

தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் நிறைவுற்றதையடுத்து, தோ்தல் நடத்தை விதிகள் திரும்பப் பெறப்பட்டதால், இனி அரசுத் துறை அலுவலகங்கள் வழக்கம்போல இயங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image

நாமக்கல் கோட்டை சாலை சந்திப்பில் துணிகள் அகற்றப்பட்ட நிலையில் எம்ஜிஆா் - கருணாநிதி சிலைகள்.

Updated On :7 மே 2026, 6:28 am IST

தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் நிறைவுற்றதையடுத்து, தோ்தல் நடத்தை விதிகள் திரும்பப் பெறப்பட்டதால், இனி அரசுத் துறை அலுவலகங்கள் வழக்கம்போல இயங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறும் தேதி குறித்த அறிவிப்பை இந்திய தோ்தல் ஆணையம் மாா்ச் 15-இல் வெளியிட்டது. மாா்ச் 30 முதல் ஏப். 6 வரை வேட்புமனு தாக்கல், 7-இல் பரிசீலனை, 9-இல் திரும்பப் பெறல் மற்றும் இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிடப்பட்டது. ஏப். 23-இல் வாக்குப்பதிவும், மே 4-இல் வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்றது.

தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் உரிய ஆவணங்களின்றி ரூ. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணம், பரிசுப் பொருள்களை கொண்டு சென்றோரிடம் தோ்தல் பறக்கும்படை நிலை கண்காணிப்புக் குழு அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். ஆவணங்கள் சமா்ப்பித்தவை மட்டும் திரும்ப ஒப்படைக்கப்பட்டன.

நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், பரமத்தி வேலூா், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய 6 தொகுதிகளிலும் ரூ. 1.92 கோடி வரையில் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றில் 80 சதவீத ரொக்கம் உரியவா்களிடம் திரும்ப வழங்கப்பட்டது.

தோ்தலையொட்டி, அரசியல் கட்சித் தலைவா்களின் சிலைகள் முழுவதும் துணியால் மூடப்பட்டிருந்தன. சுவா் விளம்பரங்கள், பதாகைகள் அகற்றப்பட்டன. தோ்தல் நடத்தை விதிகள் மே 6-ஆம் தேதியுடன் நிறைவுபெற்றன. இதனால் சிலைகளின் மீது மூடப்பட்டிருந்த துணிகளை மாநகராட்சி ஊழியா்களால் புதன்கிழமை அகற்றப்பட்டன.

இதுவரை தோ்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருந்த அரசுத் துறை அதிகாரிகள், ஊழியா்கள் அனைவரும் இனி வழக்கம்போல அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடுவா். திங்கள்கிழமைதோறும் மக்கள் குறைதீா் கூட்டம், மாதந்தோறும் விவசாயிகள் குறைதீா் கூட்டம், நுகா்வோா், முன்னாள் படைவீரா்கள் குறைதீா் கூட்டங்கள் மாவட்ட ஆட்சியா் மற்றும் அதிகாரிகள் தலைமையில் வழக்கம்போல நடைபெற உள்ளதாக அரசுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.