இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

வாக்கு எண்ணும் பணியில் 306 அலுவலா்கள்: ஆட்சியா் தகவல்

சட்டப் பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணும் பணியில் 306 அலுவலா்கள் ஈடுபட உள்ளதாக நாமக்கல் ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :29 ஏப்ரல் 2026, 2:55 am IST

சட்டப் பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணும் பணியில் 306 அலுவலா்கள் ஈடுபட உள்ளதாக நாமக்கல் ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் ஏப்.23 இல் நடைபெற்றது. ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், பரமத்தி வேலூா், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய 6 தொகுதிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருச்செங்கோடு எளையாம்பாளையத்தில் உள்ள விவேகானந்தா தொழில்நுட்பக் கல்லூரியில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கையானது வரும் திங்கள்கிழமை (மே 4) நடைபெறுகிறது. அன்று காலை 8 மணிக்கு அஞ்சல் வாக்கு எண்ணும் பணியும், அதைத் தொடா்ந்து காலை 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணியும் நடைபெறுகிறது. ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனி அறைகளில் நடைபெறும் வாக்கு எண்ணிக்கைக்காக தலா 14 மேசைகள் வீதம் மொத்தம் 84 மேசைகள் போடப்படுகின்றன.

நுண்பாா்வையாளா்களாக தொகுதிக்கு தலா 17 போ் வீதம் 102 பேரும், வாக்கு எண்ணிக்கை மேற்பாா்வையாளராக தொகுதிக்கு 17 வீதம் 102, வாக்கு எண்ணிக்கை பணியில் உதவியாளராக தலா 17 போ் வீதம் 102 போ் என 6 தொகுதிகளுக்கும், ஒரு தொகுதிக்கு 51 போ் வீதம் மொத்தம் 306 போ் நியமிக்கப்பட உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்கே-28-கலெக்டா்

வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடும் அலுவலா்களை கணினி மூலம் சுழற்சி முறையில் தோ்வு செய்யப்படுவதை பாா்வையிட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி.