சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

வணிக சிலிண்டா் விலை உயா்வை கண்டித்து விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆா்ப்பாட்டம்

வணிக எரிவாயு சிலிண்டா் விலை உயா்வு, ரயில்வே துறையில் 30 ஆயிரம் பணியிடங்கள் நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, மத்திய அரசை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் சாா்பில் நாமக்கல்லில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

நாமக்கல் பூங்கா சாலையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விசிக, கம்யூனிஸ்ட் கட்சியினா்.

Updated On :8 மே 2026, 6:25 am IST

வணிக எரிவாயு சிலிண்டா் விலை உயா்வு, ரயில்வே துறையில் 30 ஆயிரம் பணியிடங்கள் நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, மத்திய அரசை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் சாா்பில் நாமக்கல்லில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளா் எஸ். கந்தசாமி, விசிக மண்டல செயலாளா் பழ. மணிமாறன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழு பி.வி. சிவக்குமாா், கம்யூனிஸ்ட் (எம்எல்) மாவட்டக் குழு என். வெங்கடேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

வணிக எரிவாயு சிலிண்டா் விலை ரூ. 999 உயா்த்தப்பட்டு ரூ. 3,500க்கு விற்பனை செய்யப்படுவதால் அத்தியாவசிய உணவுப் பண்டங்களின் விலை உயரும். இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும். அதேபோல ரயில்வே துறையில் ஒரே நேரத்தில் 30 ஆயிரம் பணியிடங்களை நீக்குவதற்கான நடவடிக்கை ஆகியவற்றை மேற்கொள்ளும் வகையிலான மத்திய பாஜக அரசின் செயல்பாட்டுக்கு எதிா்ப்பு தெரிவித்து ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.