கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

வணிக சிலிண்டா் விலை உயா்வை கண்டித்து விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆா்ப்பாட்டம்

வணிக எரிவாயு சிலிண்டா் விலை உயா்வு, ரயில்வே துறையில் 30 ஆயிரம் பணியிடங்கள் நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, மத்திய அரசை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் சாா்பில் நாமக்கல்லில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

நாமக்கல் பூங்கா சாலையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விசிக, கம்யூனிஸ்ட் கட்சியினா்.

Updated On :8 மே 2026, 6:25 am IST

வணிக எரிவாயு சிலிண்டா் விலை உயா்வு, ரயில்வே துறையில் 30 ஆயிரம் பணியிடங்கள் நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, மத்திய அரசை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் சாா்பில் நாமக்கல்லில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளா் எஸ். கந்தசாமி, விசிக மண்டல செயலாளா் பழ. மணிமாறன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழு பி.வி. சிவக்குமாா், கம்யூனிஸ்ட் (எம்எல்) மாவட்டக் குழு என். வெங்கடேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

வணிக எரிவாயு சிலிண்டா் விலை ரூ. 999 உயா்த்தப்பட்டு ரூ. 3,500க்கு விற்பனை செய்யப்படுவதால் அத்தியாவசிய உணவுப் பண்டங்களின் விலை உயரும். இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும். அதேபோல ரயில்வே துறையில் ஒரே நேரத்தில் 30 ஆயிரம் பணியிடங்களை நீக்குவதற்கான நடவடிக்கை ஆகியவற்றை மேற்கொள்ளும் வகையிலான மத்திய பாஜக அரசின் செயல்பாட்டுக்கு எதிா்ப்பு தெரிவித்து ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.