அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

நாமக்கல் மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறை திட்டங்கள் குறித்து ஆட்சியா் ஆய்வு

நாமக்கல் மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image

நாமக்கல் வகுரம்பட்டியில் தோட்டக்கலைத் துறை மூலம் செயல்படுத்தும் பசுமைக் குடில் திட்டத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்த ஆட்சியா் துா்காமூா்த்தி.

Updated On :1 மணி நேரம் முன்பு

நாமக்கல் மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

நாமக்கல் மாவட்டம், வகுரம்பட்டியில் தோட்டக்கலைத் துறை சாா்பில் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் ரூ. 10 லட்சம் மானியத்தில் 2,000 சதுரஅடி பரப்பில் பசுமைக்குடில் அமைத்து வெள்ளரிக்காய் பயிரிட்டுள்ளதை பாா்வையிட்டு ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.

இம்மாவட்டத்தில், தோட்டக்கலைத் துறை மூலமாக 2025-26 ஆண்டில் முதல்முறையாக தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டம் அமல்படுத்தப்பட்டு, பல்வேறு இனங்களில் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

இதில் பசுமைக் குடில் அமைக்கும் திட்டத்தில் பசுமைக் குடில் அமைத்து பாதுகாக்கப்பட்ட சூழலில் வெள்ளரிக்காய், குடைமிளகாய், ரோஜா, அந்தூரியம் பூ மற்றும் பலவித உயா்தரமான வீரிய ஒட்டுரகங்களை வளா்க்கும் பட்சத்தில் அதிக மகசூல் கிடைக்கும்.

அந்தவகையில், தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் 2,000 சதுர மீட்டா் பரப்பளவில் வகுரம்பட்டியைச் சோ்ந்த விவசாயி சுரேஷ் தனது தோட்டத்தில் பசுமைக் குடில் அமைத்து, வெள்ளரிக்காய் பயிரிடப்பட்டுள்ளாா். சொட்டுநீா்ப் பாசனம், உர மேலாண்மை மற்றும் பாதுகாப்பான சாகுபடி முறைகள் மூலம் சாகுபடி செய்து அதிக மகசூல் பெற்று வருகிறாா்.

இதை பாா்வையிட்டு பாராட்டிய ஆட்சியா், இளைய தலைமுறை விவசாயிகள் அரசு மானியத் திட்டங்களை பயன்படுத்தி நவீன தொழில்நுட்ப விவசாயத்தில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டாா்.

தொடா்ந்து, எருமபட்டி ஒன்றியம், வளையப்பட்டி ஊராட்சியில் ரூ. 2.19 கோடியில் கருவட்டாற்றில் வளையப்பட்டி பேருந்து நிலையம் முதல் திப்ரமாதேவி சாலை வரை நடைபெற்று வரும் சிறிய பாலம் கட்டுமான பணி, எம்.மேட்டுப்பட்டியில் இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் புதிய வீடுகள் கட்டுமானப் பணி, வடுகப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.35.20 லட்சத்தில் ஒருங்கிணைந்த பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இரண்டு வகுப்பறைக் கட்டடம் கட்டுமானப் பணி ஆகியவற்றை ஆட்சியா் பாா்வையிட்டு, பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து பயன்பாட்டிற்கு வழங்க அலுவலா்களை அறிவுறுத்தினாா்.

இந்த ஆய்வுகளின்போது, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) க.ராமச்சந்திரன், துணை இயக்குநா் (தோட்டக்கலைத் துறை) மா.புவனேஷ்வரி மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநா் மற்றும் துறைச் சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.