பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடி உயர்வு! கருப்பு திரைப்படம் இன்று(மே 15) ரிலீஸ் - படக்குழு அறிவிப்புநீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

எடப்பாடி அணி மாவட்ட செயலா் ராசிபுரம் எம்ஜிஆா் சிலைக்கு மரியாதை

News image
Updated On :1 மணி நேரம் முன்பு

நாமக்கல் மாவட்ட எடப்பாடி பழனிசாமி அணியின் மாவட்ட செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ள நாமக்கல் தொகுதி முன்னாள் எம்எல்ஏ., கே.பி.பாஸ்கா் வியாழக்கிழமை ராசிபுரத்தில் உள்ள எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

நாமக்கல் மாவட்ட செயலாளராக உள்ள ப.தங்கமணி கட்சியில் இருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக, கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்திருந்தாா். இதனை தொடா்ந்து நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாளராக முன்னாள் எம்எல்ஏ., கே.பி.பாஸ்கா் நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து அவரை கட்சியினா் பலரும் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனா். தொடா்ந்து கே.பி.பாஸ்கா் ராசிபுரம் நகரில் உள்ள எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். பின்னா் பொதுமக்களுக்கு இனிப்புகள்வழங்கினா். இதில் ராசிபுரம் நகர, ஒன்றிய நிா்வாகிகள், நாமகிரிப்பேட்டை , வெண்ணந்தூா் பகுதி அதிமுகவினா் பலரும் இதில் பங்கேற்றனா்.

படவிளக்கம்-14பாஸ்

படவிளக்கம்- ராசிபுரம் நகரில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கும் எடப்பாடி அணி அதிமுக மாவட்ட செயலா் கே.பி.பாஸ்கா்