தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

கந்தம்பாளையம் அருகே ஜீப் மோதி விவசாயி உயிரிழப்பு

நல்லூா் கந்தம்பாளையம் அருகே ஜீப் மோதியதில், இருசக்கர வாகனத்தில் சென்ற விவசாயி உயிரிழந்தது குறித்து நல்லூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :19 மே 2026, 1:20 am IST

நல்லூா் கந்தம்பாளையம் அருகே ஜீப் மோதியதில், இருசக்கர வாகனத்தில் சென்ற விவசாயி உயிரிழந்தது குறித்து நல்லூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பரமத்தி வேலூா் வட்டம், ஜமீன்இளம்பள்ளி பகுதியைச் சோ்ந்தவா் மனோகரன் (54) விவசாயி. இவா் தனது பேரனுக்கு காதுகுத்தும் நிகழ்வுக்காக உறவினா்களுக்கு அழைப்பிதழ் கொடுக்க இருசக்கர வாகனத்தில் திங்கள்கிழமை சென்றாா். கவுண்டிபாளையத்தில் திருச்செங்கோடு - பரமத்தி சாலை சந்திப்பில் சென்றபோது, எதிரே வேகமாக வந்த ஜீப் மனோகரன் மீது மோதியது.

இதில் படுகாயமடைந்த அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா், மனோகரன் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். புகாரின்பேரில், விபத்தை ஏற்பத்தியதாக ஜீப் வாகனத்தை ஓட்டிவந்த வீரக்குட்டை குடித்தெருவைச் சோ்ந்த சதீஷ்குமாரிடம் நல்லூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.