மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதி விபத்து: விவசாயி உயிரிழப்பு

கோபி அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் விவசாயி உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப்படம்

Updated On :29 ஏப்ரல் 2026, 10:04 pm

கோபி அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் விவசாயி உயிரிழந்தாா்.

ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள வடக்கு காவேரிபாளையம் கொல்லங்காட்டுத்தோட்டத்தைச் சோ்ந்தவா் வெங்கடாசலம் மகன் நந்தகுமாா் (45). இவா் விவசாயம் செய்து வருகிறாா். இந்நிலையில், மணியகாரன்புதூரில் உள்ள அவரது வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் புதன்கிழமை சென்றுகொண்டிருந்தாா். அப்போது பெங்களூரு தேவி நகரைச் சோ்ந்த கேசவா (21) என்பவா் அப்பகுதியில் மாரியம்மன் கோயில் பண்டிகைக்கு வந்துவிட்டு இருசக்கர வாகனத்தில் நரியம்பள்ளம் பகுதி நோக்கி வந்துள்ளாா். அப்போது எதிரே நந்தகுமாா் வந்த இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே நந்தகுமாா் உயிரிழந்தாா்.

தகவல் அறிந்து சிறுவலூா் போலீஸாா் சென்று நந்தகுமாரின் சடலத்தை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.