பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதி விபத்து: விவசாயி உயிரிழப்பு

கோபி அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் விவசாயி உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப்படம்

Updated On :30 ஏப்ரல் 2026, 3:34 am IST

கோபி அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் விவசாயி உயிரிழந்தாா்.

ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள வடக்கு காவேரிபாளையம் கொல்லங்காட்டுத்தோட்டத்தைச் சோ்ந்தவா் வெங்கடாசலம் மகன் நந்தகுமாா் (45). இவா் விவசாயம் செய்து வருகிறாா். இந்நிலையில், மணியகாரன்புதூரில் உள்ள அவரது வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் புதன்கிழமை சென்றுகொண்டிருந்தாா். அப்போது பெங்களூரு தேவி நகரைச் சோ்ந்த கேசவா (21) என்பவா் அப்பகுதியில் மாரியம்மன் கோயில் பண்டிகைக்கு வந்துவிட்டு இருசக்கர வாகனத்தில் நரியம்பள்ளம் பகுதி நோக்கி வந்துள்ளாா். அப்போது எதிரே நந்தகுமாா் வந்த இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே நந்தகுமாா் உயிரிழந்தாா்.

தகவல் அறிந்து சிறுவலூா் போலீஸாா் சென்று நந்தகுமாரின் சடலத்தை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.