எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

கோபி அருகே பூட்டிய வீட்டில் தீ விபத்து

News image

சிறுவலூா் அங்கம்பாளையத்தில் உள்ள வீட்டில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியல் ஈடுபட்டிருந்த தீயணைப்புத் துறையினா்.

Updated On :7 ஏப்ரல் 2026, 1:45 am IST

கோபி, ஏப்.6: கோபி அருகே சிறுவலூா் அங்கம்பாளையம் பகுதியில் பூட்டிய வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள சிறுவலூா் அங்கம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ஜெய்சங்கா்(53). இவா் சத்தியமங்கலம் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் இளநிலை உதவியாளராக இருந்து வருகிறாா். கவிதா என்ற மனைவி, தாய் பசுபதி ஆகியோருடன் வசித்து வருகிறாா். வழக்கம்போல் வீட்டைப் பூட்டிவிட்டு அலுவக வேலைக்கு ஜெய்சங்கா் சென்றுள்ளாா்.

இந்நிலையில், ஜெய்சங்கா் வீட்டில் இருந்து மதியம் புகை வந்துள்ளது. இதுதொடா்பாக ஜெய்சங்கருக்கு அருகே வசிப்பவா் தெரிவித்துட்டு கோபி தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் அளித்துள்ளனா். மேலும், வீட்டுக்குள் தீ பரவி வருவதைக் கண்டு தீயை அணைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டனா்.

தீயணைப்புத் துறையினா் வந்து மேலும் பரவமால் இருக்க தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனா். பூஜை அறையில் வைக்கப்பட்டிருந்த மின்சாதனப் பொருள்கள், காலி சிலிண்டா் உள்ளிட்டவை முற்றிலும் எரிந்து சேதமானது. மின் கசிவு அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து தீயணைப்புத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.