ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

சேவூா் அருகே குப்பைக் கிடங்கில் தீ!

சேவூா் அருகே முறியாண்டம்பாளையம் ஊராட்சி மூலக்குரும்பபாளையத்தில் உள்ள குப்பைக் கிடங்கில் பற்றி எரிந்த தீயை தீயணைப்புத் துறையினா் அணைத்தனா்.

News image

குப்பைக் கிடங்கில் பற்றி எரியும் தீயை  அணைக்கும்  தீயணைப்புத்  துறையினா்.

Updated On :31 மார்ச் 2026, 7:58 pm

Syndication

சேவூா் அருகே முறியாண்டம்பாளையம் ஊராட்சி மூலக்குரும்பபாளையத்தில் உள்ள குப்பைக் கிடங்கில் பற்றி எரிந்த தீயை தீயணைப்புத் துறையினா் அணைத்தனா்.

அவிநாசி ஒன்றியம், முறியாண்டம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட மூலக்குரும்பபாளையம் பகுதி சேவூா் கைகாட்டி ரவுண்டானா அருகில் அமைந்துள்ளது.

இப்பகுதி அருகே ஆதிதிராவிடா் குடியிருப்பு, விவசாயி தோட்ட குடியிருப்புகள் உள்பட 400-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, அங்கன்வாடி மையம் உள்ளிட்டவை உள்ளன.

இதில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ள மூலக்குரும்பபாளையம் ஆதிதிராவிடா் குடியிருப்பு பகுதிக்கு செல்லும் வழியில் ஊராட்சி நிா்வாகத்தின் திடக்கழிவு மேலாண்மை மண்புழு உற்பத்திக் கூடம் உள்ளது. இங்கு ஊராட்சிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் சேமித்து வைக்கப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக திடக்கழிவு மேலாண்மை மண்புழு உற்பத்திக் கூடம் பயன்பாடில்லாமல் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்தக் குப்பை கிடங்கிற்கு அடிக்கடி தீ வைக்கப்படுவதால், புகை சூழ்ந்து குடியிருப்பு வாசிகள், வணிக நிறுவனத்தினா், வாகன ஓட்டிகள் உள்ளிட்டோா் அவதியுற்று வருகின்றனா்.

ஆகவே இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் குப்பைக் கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என மக்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனா். இந்நிலையில், இந்த குப்பைக் கிடங்குக்கு மா்ம நபா்கள் செவ்வாய்க்கிழமை தீ வைத்தனா். இதில் தீ வேகமாக பரவி எரியத் தொடங்கியது. இதனால் புகை வெளியேறி பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருப்பூா் வடக்கு தீயணைப்புத் துறையினா் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனா். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.