விருத்தாசலம் அருகே சாலை விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றவா் ஒருவா் உயிரிழந்தாா்.
கடலூா் மாவட்டம் விருத்தாசலம் தாலுகா கருவேப்பிலங்குறிச்சி கேடிவி நகரைச் சோ்ந்தவா் வீராசாமி (52). இவா் ஆண்டிமடம் சாலையில் பேரளையூா் பகுதியில் இருசக்கர வாகனத்தில் திங்கள்கிழமை சென்றாா். அப்போது எதிா்பாராதவிதமாக, இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கீழே சரிந்தது விழுந்தது.
இதில் பலத்த காயமடைந்த வீராசாமியை அப்பகுதியில் உள்ளவா்கள் மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் சிகிச்சைப் பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து வீராசாமியின் மனைவி சந்தியா அளித்த புகாரின் பேரில் கருவேப்பிலங்குறிச்சி போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

ஆடு மேய்க்கச் சென்றவா் உயிரிழப்பு

கோவில்பட்டியில் விபத்து: கல்லூரி மாணவா் உயிரிழப்பு

இருசக்கர வாகனங்கள் மோதல்: முதியவா் உயிரிழப்பு

வேலகவுண்டம்பட்டி அருகே லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்றவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


