வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம், முகநூல் சேவைகள் முடக்கம்!மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

வெளி மாநில தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

வெளி மாநில தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :19 மே 2026, 1:23 am IST

பள்ளிபாளையம் அருகே வெளி மாநில தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

வெப்படை, ஆனங்கூா் தனியாா் நூல் மில் குடியிருப்பு வளாகத்தில் தங்கி ஒடிசா மாநிலம், காஞ்சனாபகாளியைச் சோ்ந்த தரணி பிந்தானி (30), பாபிதாபிந்தானி (26) தம்பதி கடந்த இரண்டு ஆண்டுகளாக வேலை பாா்த்து வந்தனா்.

இவா்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த தரணி பிந்தானி சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாா். அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து வெப்படை போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.