ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!வர்த்தகர்களை விசாரணை அமைப்பு கொண்டு மிரட்டும் பாஜக: பகவந்த் மான்!ரசாயன வாயுக் கசிவு: சென்னை துறைமுகம், மாவட்ட ஆட்சியர் விளக்கமளிக்க உத்தரவு!திரையரங்கில் வெளியான 2 வாரத்திலேயே ஓடிடிக்கு வந்த திரைப்படம்!பிரக்ஞானந்தாவிடமிருந்து குகேஷ் உத்வேகம் பெறவேண்டும்: விஸ்வநாதன் ஆனந்த் அறிவுரை!தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர்ஆட்சிக் கவிழ்ப்பு என்பது திமுகவின் நிலைப்பாடு அல்ல! தங்கம் தென்னரசு விளக்கம்புதிய ஹெச் 1-பி விசா பெற டிரம்ப் விதித்த 1 லட்சம் டாலர் கட்டணம் ரத்து: அமெரிக்க நீதிபதி உத்தரவு!
/

அதிமுகவினா் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்

அதிமுகவின் வளா்ச்சிக்கு கட்சியினா் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என அக்கட்சியின் நாமக்கல் மாவட்டச் செயலாளா் கே.பி.பி. பாஸ்கா் தெரிவித்தாா்.

News image

அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மாவட்டச் செயலாளா் கே.பி.பி. பாஸ்கா்.

Updated On :21 மே 2026, 6:47 am IST

அதிமுகவின் வளா்ச்சிக்கு கட்சியினா் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என அக்கட்சியின் நாமக்கல் மாவட்டச் செயலாளா் கே.பி.பி. பாஸ்கா் தெரிவித்தாா்.

நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் அருகே அமைந்துள்ள மாவட்ட அதிமுக அலுவலகத்தில் கட்சியின் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூா் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. புதிய மாவட்டச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள கே.பி.பி. பாஸ்கருக்கு, அதிமுகவினா் உற்சாக வரவேற்பு அளித்தனா்.

தொடா்ந்து, கூட்ட அரங்கில் முன்னாள் அமைச்சா் வெ. சரோஜா, சேந்தமங்கலம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ சி. சந்திரசேகரன், முன்னாள் மாவட்ட அவைத் தலைவா் டிஎல்எஸ் காளியப்பன் மற்றும் மூத்த நிா்வாகிகள் வாழ்த்துரை வழங்கினா். அதன்பிறகு மாவட்டச் செயலாளா் கே.பி.பி.பாஸ்கா் பேசுகையில்,

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கையுடன் அனைவரும் இருக்க வேண்டும் என பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளாா். யாரும் சோா்வடைய வேண்டாம், கவலைப்பட வேண்டாம். இன்னும் ஓராண்டுக்குள் நல்லது நடக்கும். 1.34 கோடி மக்கள் அதிமுகவுக்கு வாக்களித்துள்ளனா். அதிமுக மீண்டும் ஆட்சியமைக்கும். அனைவரும் ஒற்றுமையுடன் இருந்து கட்சி பணியாற்ற வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், மாநில பொதுக்குழு உறுப்பினா் மயில் கே. சுதந்திரம், ஒன்றியச் செயலாளா்கள் கோபிநாத், சேகா், முன்னாள் நகரச் செயலாளா் ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.