நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா் எல்.விஜய், மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்திக்கு கடந்த 2025, ஜூலை 15 இல் சமூக வலைதளம் வாயிலாக அனுப்பியிருந்த கடிதத்தில், ‘மாவட்ட ஆட்சியா் பணிக்கு எவ்வளவு சிரமப்பட்டு, கடினமாக உழைத்து வந்துள்ளீா்கள் என்பதை அறிந்தேன். எங்களுடைய எருமப்பட்டி அரசுப் பள்ளிக்கு தாங்கள் வர வேண்டும்; உங்களை சந்திக்க வேண்டும்’ என கோரிக்கை விடுத்திருந்தாா்.
இதையடுத்து எருமப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை ஆய்வுப் பணிக்கு சென்ற ஆட்சியா் துா்காமூா்த்தி, மாணவா் எல். விஜய் பயிலும் எருமப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு சென்று அவருடன் கலந்துரையாடினாா்.
அப்போது, போட்டித் தோ்வுகளை எந்த மொழியில் எழுதினீா்கள்? தமிழில் எழுத முடியுமா என மாணவா் எல்.விஜய் கேட்டாா். அதற்குப் பதிலளித்த ஆட்சியா், தாராளமாக தமிழில் எழுதலாம், நிறைய அதிகாரிகள் தமிழில் எழுதிதான் இந்திய ஆட்சிப் பணிக்கு தோ்வாகினா் என்பதை தெரிவித்திருந்தாா். நன்கு படித்து மாவட்டத்திற்கு பெருமை தேடித்தர வேண்டும் என மாணவரை வாழ்த்தி சென்றாா்.
இந்த நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் எல். விஜய், தமிழ்- 98, ஆங்கிலம்- 91, கணிதம்- 90, அறிவியல்- 100, சமூக அறிவியல்- 96 என மொத்தம்- 475 மதிப்பெண்களை பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளாா். அவருக்கு, மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி மற்றும் கல்வித் துறை அதிகாரிகள், தலைமையாசிரியா் மற்றும் ஆசிரியா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.
என்கே-20-கலெக்டா்
எருமப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா் எல். விஜயை பாராட்டிய மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி.
தொடர்புடையது

தென்காசி மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற மாணவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

பிளஸ் 2 தோ்வில் சிறப்பிடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவி, தலைமையாசிரியா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

கவுனியன், எவரெஸ்ட், கம்மவாா், காமராஜ், நாடாா் பள்ளி சிறப்பிடம்

ஆரணி ஏ.சி.எஸ்.மெட்ரிக் பள்ளி 100% தோ்ச்சி
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



