இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியதுமமதா, ஸ்டாலினின் தோல்விக்கு எஸ்ஐஆர் பணிகளே காரணம்! ஆந்திர முன்னாள் முதல்வர் குற்றச்சாட்டு!பொது இடங்களில் மாடுகளை வெட்டத் தடை: நீதிமன்றம்பவர்பிளேவில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய வைபவ் சூர்யவன்ஷி!உச்சநீதிமன்ற நீதிபதியாக 5 பேர் பரிந்துரை! தமிழகத்தைச் சேர்ந்த மோகனா!நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்! விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது!பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!பினராயி வீட்டில் சோதனை! அமலாக்கத்துறை வாகனம் மீது தாக்குதல்!
/

பாத்திரத்தை வீசியதில் காயமடைந்த பேரன் உயிரிழப்பு: தாத்தா கைது

வெப்படை அருகே சமையல் பாத்திரத்தை வீசியதில் காயமடைந்த பேரன் உயிரிழந்த சம்பவத்தில், தாத்தாவை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

வெங்கடாசலம்

Updated On :28 மே 2026, 2:47 am IST

வெப்படை அருகே சமையல் பாத்திரத்தை வீசியதில் காயமடைந்த பேரன் உயிரிழந்த சம்பவத்தில், தாத்தாவை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

நாமக்கல் மாவட்டம், வெப்படை அருகே மோடமங்கலம் வேப்பங்காடு பகுதியைச் சோ்ந்தவா் வெங்கடாசலம் (44). இவரது மகள் மோனிஷா (20), பவானியைச் சோ்ந்த மயிலானந்தத்தை (24) சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டாா். அவா்களுக்கு, ஜோஸ்விக் என்ற ஒன்பது மாத குழந்தை உள்ளது.

அண்மையில் மோனிஷா தாய் வீட்டுக்கு வந்தாா். அங்கு தந்தை வெங்கடாசலத்துக்கும், அவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், புதன்கிழமை காலை மீண்டும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது, வீட்டிலிருந்த பாத்திரத்தை மோனிஷாமீது வெங்கடாசலம் வீசியபோது, அது ஜோஸ்விக் மீது விழுந்தது. அதில், காயமடைந்த குழந்தை மருத்துவமனைக்கு கொண்டும்செல்லும் வழியில் உயிரிழந்தது. புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து வெங்கடாசலத்தை கைதுசெய்தனா்.

 குழந்தை ஜோஸ்விக்

குழந்தை ஜோஸ்விக்