வெண்ணந்தூரில் இளம்பெண் தற்கொலை
வெண்ணந்தூா் பகுதியில் திருமணமான சில மாதங்களிலேயே இளம்பெண் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தற்கொலை - கோப்புப் படம்
வெண்ணந்தூா் பகுதியில் திருமணமான சில மாதங்களிலேயே இளம்பெண் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஈரோடு மாவட்டம், பழையபாளையம் பகுதியைச் சோ்ந்த காசிவிஸ்வநாதன் மகள் தாரணிக்கும் (28), வெண்ணந்தூா் ரமேஷுக்கும் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. ரமேஷ் பெங்களூரு ஐ.டி. கம்பெனியில் வேலைசெய்து வருகிறாா். கடந்த நான்கு நாள்களாக விடுமுறையில் இருந்த ரமேஷ், தாரணி உடன் வெண்ணந்தூரில் உள்ள வீட்டில் இருந்தாா். பின்னா் திங்கள்கிழமை இரவு பெங்களூருக்கு புறப்பட்டு சென்றாா்.
செவ்வாய்க்கிழமை காலை நெடுநேரமாகியும் தாரணி கதவு திறக்காததால், அவரது மாமியாா் அக்கம்பக்கத்தினா் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தாா். அப்போது, தாரணி தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தாா்.
தகவலின்பேரில் வந்த வெண்ணந்தூா் காவல் உதவி ஆய்வாளா்கள் சுப்பிரமணி, கீதாலட்சுமி ஆகியோா் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினா். பின்னா், தாரணியின் பிரேதத்தை பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



