தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

சேலம் புதிய பேருந்து நிலையத்தில் பாலியல் தொழிலாளர்களின் ஆதிக்கம்

சேலம் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடும் திருநங்கைகள், பெண்களின் ஆதிக்கத்தால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

Updated On :15 அக்டோபர் 2013, 4:00 am IST

சேலம் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடும் திருநங்கைகள், பெண்களின் ஆதிக்கத்தால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து வெளி மாநிலங்கள், மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பேருந்து நிலைய வளாகத்தின் முன்பகுதியில் பள்ளப்பட்டி காவல் நிலையம் உள்ளது.

புதிய பேருந்து நிலைய வளாகத்தில் திருநங்கைகள், பெண் பாலியல் தொழிலாளர்களால் கல்லூரி மாணவர்கள், பயணிகள் பெரும் பாதிப்புக்குளாகின்றனர்.

இரவு 10 மணிக்கு மேல் பேருந்து நிலைய வளாகத்தைச் சுற்றியுள்ள கடைகள், எதிரேயுள்ள ஓமலூர் சாலை, ஐந்து சாலைப் பகுதிகளில் தொடங்கி பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வரையிலும் திருநங்கைகளின் பிடியில் பல இளைஞர்கள் சிக்கித் தவிக்கின்றனர்.

புதிய பேருந்து நிலையத்தில் இளைஞர்களிடம் ஆசை வார்த்தைகளைக் கூறி அழைத்துச் சென்று பணத்தை பறித்துக் கொள்ளும் சம்பவங்கள் தொடர்கின்றன.

இதுகுறித்து வெளியே சொல்லவும், காவல் நிலையத்தில் புகார் அளிக்கவும் முடியாமல் இளைஞர்களை தவிப்பதைக் காண முடிகிறது.

பேருந்து நிலைய வளாகத்திலேயே பள்ளிப்பட்டி காவல் நிலையம் இருந்தும் இந்தச் சம்பவங்கள் தொடர்வது வேதனையளிப்பதாக உள்ளதாக பயணிகள் தெரிவித்தனர்.

அதேபோல, சேலம் சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து, புதிய பேருந்து நிலையம் வரும் பயணிகளும் இதுபோன்ற தொந்தரவுகளை சந்திக்கின்றனர். ஓமலூர் சாலையில் திருநங்கைகள் அட்டகாசம் அதிகரித்துள்ளது.

திருநங்கைகளின் மேம்பாடு, சமூக அந்தஸ்துக்காக பல அமைப்புகள் செயல்பட்டாலும், பலரும் பாலியல் தொழிலையே நம்பியுள்ளனர்.

இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத திருநங்கைகள் சிலர் கூறியது:

சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டு வேறு எங்கும் செல்ல வழியில்லாமல் பாலியல் தொழிலில் ஈடுபடுகின்றனர். சிலர் ரயில்களிலும், கடை வீதிகளிலும் யாசகம் கேட்கின்றனர்.

தற்போதுதான் சிலர் படிக்கத் தொடங்கியுள்ளனர். படிக்காத பலரும் பாலியல் தொழிலையே நாடிச் செல்ல வேண்டியுள்ளது என்றனர் அவர்கள்.

புதிய பேருந்து நிலையப் பகுதியில் நடைபெறும் இந்த பாலியல் தொந்தரவுக்கு முற்றுப்புள்ளி வைக்க காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.