மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

சேலம் தெற்கு தொகுதி:தீராத போக்குவரத்துப் பிரச்னை!

தீராத போக்குவரத்துப் பிரச்னை!

Updated On :8 ஏப்ரல் 2016, 9:29 pm

சேலம் நகரப் பகுதியாக இருந்தாலும், சேலம் தெற்கு தொகுதி சுகாதாரம் மற்றும் போக்குவரத்துப் பிரச்னை தீர்க்க முடியாததாக உள்ளது.

இதனிடையே, புதை சாக்கடைத் திட்டம் என்ற பெயரில் சாலைகள் தோண்டப்பட்டு குண்டும், குழியுமாக உள்ளன. சேலம் பழைய பேருந்து நிலையம் முதல் தாதகாபட்டி வரை சாலை விரிவாக்கம் இல்லாததால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

மேலும், சேலம் தனிக் குடிநீர்த் திட்டத்தில் முழுமையாக குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. தற்போது கோடை வெயில் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில், நிலத்தடி நீரும் குறைந்து, குடிநீர்த் தட்டுப்பாடு முக்கியப் பிரச்னையாக உள்ளது.

அதேபோல, சேலம் நகரப் பகுதியில் உள்ள கிச்சிபாளையம், எருமாபாளையம் குப்பைமேட்டால் ஏற்படும் சுகாதாரச் சீர்கேடு பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையிலான திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. திருமணிமுத்தாறு திட்ட விரிவாக்கம் ஆகியவை தீர்க்கப்படாத பிரச்னையாக உள்ளன.

திருமணிமுத்தாறில் கலக்கும் கழிவுகளை அகற்றி, தூர்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

குகை பகுதியில் விசைத்தறிகளுக்குரிய சுத்திகரிப்பு நிலையம் இல்லாததால், திருமணிமுத்தாறில் சாயக் கழிவு நீர் கலக்கிறது.

அம்மாபேட்டை மற்றும் மார்க்கெட், பழைய பேருந்து நிலையம், குகை மற்றும் தாதகாபட்டி ஆகிய பகுதிகள் நெரிசல் மிக்கதாக உள்ளன. நெரிசலைக் குறைக்கவும், சாலைப் போக்குவரத்து வசதியை மேம்படுத்தவும் பல ஆண்டுகளாகக் கோரிக்கை விடப்பட்டு வருகிறது.

கிச்சிபாளையம், எருமாபாளையம் பகுதிகள் நகரப் பகுதி அருகே இருந்த போதிலும், முறையான சாக்கடை, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் இருக்கிறது. இதனால், இப் பகுதியில் சுகாதாரச் சீர்கேடு தலையாயப் பிரச்னையாக உள்ளது.

அதேபோல, கடந்த 50 ஆண்டுகளாக பழைய பேருந்து நிலையம் எவ்வித மேம்பாடு இல்லாமல் அப்படியே உள்ளது.

வேகமயமான நகர மயமாக்கல், நெருக்கடி மிகுந்த சாலை, விசைத்தறி தொழிற்கூடங்களுக்கென தனியாக ஜவுளிப் பூங்கா அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தீர்க்கப்படாமல் உள்ளன.

பொதுவாக, சேலம் தெற்கு தொகுதியைப் பொருத்தவரையில், போக்குவரத்து நெரிசலும், சுகாதாரச் சீர்கேடும் தீர்க்கப்படாத பிரச்னையாக உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.