பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

விவசாயிகளுக்கு அசோலா வளர்ப்பு செயல்முறை விளக்கம்

மகுடஞ்சாவடி வேளாண் உதவி இயக்குநர் அலுவலகம் சார்பில் கன்னந்தேரி கிராமத்தில் விவசாயிகளுக்கு அசோலா வளர்ப்பு குறித்த செயல்முறை விளக்கம்  புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :28 டிசம்பர் 2017, 1:50 am

DIN

மகுடஞ்சாவடி வேளாண் உதவி இயக்குநர் அலுவலகம் சார்பில் கன்னந்தேரி கிராமத்தில் விவசாயிகளுக்கு அசோலா வளர்ப்பு குறித்த செயல்முறை விளக்கம்  புதன்கிழமை நடைபெற்றது.
மகுடஞ்சாவடி வேளாண் உதவி இயக்குநர் ஆர்.செல்லத்துரை தலைமை வகித்து,  கன்னந்தேரி கிராமத்தில்  விவசாயிகளிடத்தில் அசோலா குறைந்த செலவில் கால்நடைகளுக்கு தீவனமாகவும், நெல் சாகுபடியில் உயிர் உரமாகவும் செயல்பட்டு மண்ணின் தரத்தை மேம்படுத்தப் பயன்படுகிறது என்றார். 
உழவர் பயிற்சி நிலைய வேளாண் துணை இயக்குநர் வி.குணசேகரன் முன்னிலை வகித்து, அசோலாவை கால்நடை மற்றும் கோழிகளுக்கு பயன்படுத்துவதனால் ஏற்படும் பயன்கள் குறித்து விளக்கி கூறினார். அட்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர் விஜயகுமார் அசோலாவை வளர்ப்பது அதற்கு வேளாண் துறையின் சார்பில் வழங்கப்படும் மானியங்கள் குறித்தும் செயல்முறை விளக்கம் அளித்தார். இதில் அட்மா திட்ட உதவித் தொழில்நுட்ப மேலாளர் கார்த்திகேயன்,  மகேந்திரன் மற்றும் விவசாயிகள்  கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.