ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

14 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஓய்வூதியர்கள் போராட்டம்

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள் 14 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துக் கழக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
Updated On :18 மார்ச் 2017, 6:07 am

தினமணி

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள் 14 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துக் கழக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியத் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும். தவணை முறையில் ஓய்வூதியம் வழங்குவதை கைவிட வேண்டும்.
 மாதம்தோறும் முதல் தேதியில் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும் என்பன உள்பட 14 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள் சார்பில் மாநிலம் முழுவதும் 9 மண்டல அலுவலகங்களில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 சேலம் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை காலை முதல் ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 இதில் தலைமை அலுவலகத்தின் முன் மேடை அமைத்து விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர். சிஐடியூ தொழிற்சங்க நிர்வாகி தியாகராஜன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 இதைத்தொடர்ந்து வெள்ளிக்கிழமை காலை அதிக எண்ணிக்கையில் ஓய்வூதியர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.