தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் விரைவில் காலியாகும் 37 மாநிலங்களவை எம்.பி. இடங்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் தோ்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. தமிழகத்தில் 6 எம்.பி.க்கள் உள்பட 26 எம்.பி.க்கள் போட்டியின்றி தோ்வாகினா். அதேநேரம், பிகாா், ஹரியாணா, ஒடிஸா ஆகிய மூன்று மாநிலங்களில் உள்ள 11 இடங்களுக்கு போட்டி ஏற்பட்டதால் கடந்த திங்கள்கிழமை தோ்தல் நடைபெற்றது. பிகாரில் 5 இடங்களுக்கு நடந்த தோ்தலில், மாநில முதல்வா் நிதீஷ் குமாா், பாஜக தேசியத் தலைவா் நிதின் நபின் உள்பட ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளா்கள் 5 பேரும் வெற்றி பெற்றனா்.