பள்ளி வளாகத்தில் பெற்றோர் அறியும் வண்ணம் அரசின் அங்கீகாரம் பெற்ற விவரங்களை குறிப்பிட்டு அங்கீகார ஆணையின் எண், நாள், அங்கீகாரம் வழங்கப்பட்ட காலம் ஆகியவற்றை எழுதி வைக்க வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அ.ஞானகௌரி தெரிவித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜி.சுந்தரபாண்டியன் என்பவரால் தொடரப்பட்ட பொது நல வழக்கில் உயர்நீதிமன்றத் தீர்ப்பாணையின் அடிப்படையில், சேலம் மாவட்டத்தில் இயங்கும் (சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ., ஐ.பி.) போன்ற இதர வாரியப் பாடத் திட்டங்களின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளிகள் மற்றும் மெட்ரிக், மழலையர் பள்ளிகள் தங்களது பள்ளி வளாகத்தில் பெற்றோர் அறியும் வண்ணம் அரசின் அங்கீகாரம் பெற்ற விவரம் குறிப்பிட்டு, அங்கீகார ஆணை எண், நாள், அங்கீகாரம் வழங்கப்பட்ட காலம் ஆகியவற்றை எழுதி தெரிவித்தல் வேண்டும்.
அங்கீகாரம் பெறப்படவில்லை எனில் நாளது வரை அங்கீகாரம் பெறப்படவில்லை என்ற விவரத்தையும் குறிப்பிட்டு பள்ளி முகப்பில் தட்டி (போர்டு) வைத்திட வேண்டும். சி.பி.எஸ்.இ. போன்ற பிற வாரியப் பள்ளிகள் சம்பந்தப்பட்ட வாரியத்தில் இணைப்பு ஆணை எண், நாள் போன்ற விவரங்களை கூடுதலாக எழுதி வைத்திடல் வேண்டும் என முதன்மைக் கல்வி அலுவலர் அ.ஞானகௌரி தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குட்டித் தூக்கம் போடுபவர்களுக்காக போட்டி நடத்திய தென் கொரியா!

நமன் திர் அரைசதம்; சிஎஸ்கேவுக்கு 160 ரன்கள் இலக்கு!
பிருத்விராஜின் கலிஃபா வெளியீட்டுத் தேதி!

ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

