சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

நகைக் கடையில் திருடியதாக இருவர் கைது

எடப்பாடியில் நகைக் கடையில் திருடியதாக மதுரையைச் சேர்ந்த இரு இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர். 

Updated On :9 ஏப்ரல் 2018, 2:33 am

எடப்பாடியில் நகைக் கடையில் திருடியதாக மதுரையைச் சேர்ந்த இரு இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர். 
எடப்பாடியை அடுத்த வெள்ளக்கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் கோபால் (65). இவர் கடைவீதியில் நகைக் கடை வைத்துள்ளார். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை கடைக்கு வந்த இரு இளைஞர்கள் வெள்ளி நகை வேண்டும் என்று கேட்டனர். கோபால் நகையை எடுக்கச் சென்றபோது கடையில் இருந்த பணப் பையைத் திருடிக் கொண்டு அவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பியோடியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து கோபால், எடப்பாடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில்,   சேலம் - எடப்பாடி சாலையில் நடந்த வாகனச் சோதனையில் சந்தேகப்படும்படியாக வந்த இரு இளைஞர்களை, காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர். இதில் அவர்கள், மதுரை, வண்டியூரைச் சேர்ந்த ராஜு மகன் ரவி (28), அவரது தம்பி சங்கர்(23) என்பதும்,  இருவரும் சேர்ந்து  நகைக் கடையில் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.