எடப்பாடியில் நகைக் கடையில் திருடியதாக மதுரையைச் சேர்ந்த இரு இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.
எடப்பாடியை அடுத்த வெள்ளக்கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் கோபால் (65). இவர் கடைவீதியில் நகைக் கடை வைத்துள்ளார். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை கடைக்கு வந்த இரு இளைஞர்கள் வெள்ளி நகை வேண்டும் என்று கேட்டனர். கோபால் நகையை எடுக்கச் சென்றபோது கடையில் இருந்த பணப் பையைத் திருடிக் கொண்டு அவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பியோடியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து கோபால், எடப்பாடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில், சேலம் - எடப்பாடி சாலையில் நடந்த வாகனச் சோதனையில் சந்தேகப்படும்படியாக வந்த இரு இளைஞர்களை, காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர். இதில் அவர்கள், மதுரை, வண்டியூரைச் சேர்ந்த ராஜு மகன் ரவி (28), அவரது தம்பி சங்கர்(23) என்பதும், இருவரும் சேர்ந்து நகைக் கடையில் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தலைநகரில் வெப்பநிலை அதிகரிப்பு: அடுத்த வாரம் 40 டிகிரி உயர வாய்ப்பு

பொத்தனூரில் வெற்றிலை ஆராய்ச்சி மையம்: திமுக வேட்பாளா் கே.எஸ். மூா்த்தி உறுதி

மேட்டூா் அணை உபரிநீா் திட்டம் காடையாம்பட்டிக்கு விரிவுபடுத்தப்படும்: பிரேமலதா விஜயகாந்த்!
திருச்செங்கோட்டில் தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

