ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

கோடை விடுமுறை தொடங்கியதால் பொம்மைகள் விற்பனை அதிகரிப்பு 

கோடை விடுமுறை தொடங்கியதால், வாழப்பாடியில் பொம்மைகள் விற்பனை அதிகரித்துள்ளன. 

Updated On :18 ஏப்ரல் 2018, 9:46 am IST

கோடை விடுமுறை தொடங்கியதால், வாழப்பாடியில் பொம்மைகள் விற்பனை அதிகரித்துள்ளன.
 அனைத்துப் பள்ளிகள் மற்றும் பெரும்பாலான கல்லூரிகளும், ஏப்ரல் மாத இறுதியில் இருந்து மே மாத இறுதி வரையிலான ஒரு மாதத்துக்கு கோடை விடுமுறை விடப்படுகிறது.
 கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுவதால், குழந்தைகளை வெளியே செல்ல அனுமதிக்காத பெற்றோர்கள், குழந்தைகள் வெயிலில் சுற்றுவதை தவிர்த்து வீட்டுக்குள்ளேயே விளையாடி மகிழ்ந்திடும் வகையில், விதவிதமான பொம்மைகளை வாங்கித் தருகின்றனர்.
 தற்போது கோடை விடுமுறை தொடங்கியதால், வாழப்பாடி பகுதியில் பொம்மைகள் விற்பனை அதிகரித்துள்ளன.
 வாழப்பாடியில் மக்கள் நடமாடும் சாலையோரத்திலும், மக்கள் கூடும் பொது இடங்களிலும் குவித்து வைத்து, பொம்மைகளை வியாபாரிகள் கூவிக்கூவி விற்பனை செய்து வருகின்றனர்.
 இதில், வீட்டு உபயோக சாமான்கள், மருத்துவர்களின் கருவிகள், வாகனங்கள், பழங்கள், விலங்குகள், குழந்தைகளின் மாதிரி பொம்மைகளும், பேட்டரியிலும், ரிமோட்டிலும் இயங்கும் வாகனங்களும் அதிகளவில் விற்பனையாகின்றன.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.