வாழப்பாடியில் விவசாய நிலங்களுக்கு மேல் உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், 8-ஆவது நாளான திங்கள்கிழமை தூக்குக்கயிறு மாட்டி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விளைநிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் திட்டத்தை கைவிடக் கோரியும், சாலையோரங்களில் புதைவட முறையில் மின்சாரத்தை கொண்டுச் செல்ல மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியும், சேலம், நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள், வாழப்பாடியை அடுத்த சேசன்சாவடியில் கொட்டகை அமைத்து தங்கி, 8-ஆவது நாளாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஞாயிற்றுக்கிழமை முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், திங்கள்கிழமை தூக்குக் கயிறு மாட்டி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் கூறியது: விவசாய நிலங்களுக்கு மேல் உயர்மின் கோபுரங்கள் வழியாகச் செல்லும் மின்சாரம், கிழே வசிக்கும் விவசாயிகளுக்கு மரண பயத்தை ஏற்படுத்துகிறது. ஏற்கெனவே அமைத்த உயர்மின் கோபுரங்களுக்கே இன்னும் உரிய நிவாரணம் வழங்கவில்லை. இந்நிலையில் எட்டாவது நாளாக தொடர் காத்திருப்புப் போராட்டம் நடத்திய எங்களின் கோரிக்கை குறித்து கேட்பதற்கு கூட இந்த அரசு தயாராக இல்லை என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நடிகைகள் எல்லைகளை வகுத்துக்கொள்ள வேண்டும்: நித்யா மெனன்

இன்றைய செய்திகள் ஜூன் 9 - நேரலை!

பவானி - துபைக்கு ரூ. 10,000! அரசுப் பேருந்து டிக்கெட்டால் அதிர்ச்சி!

அரசுக் கலைக் கல்லூரிகளில் அதிக விண்ணப்பம் வந்திருக்கும் படிப்பு இதுதான்!
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP


