கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

தூக்குக்கயிறு மாட்டி விவசாயிகள் போராட்டம்

வாழப்பாடியில் விவசாய நிலங்களுக்கு மேல் உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து

Updated On :25 டிசம்பர் 2018, 8:28 am IST

வாழப்பாடியில் விவசாய நிலங்களுக்கு மேல் உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், 8-ஆவது  நாளான திங்கள்கிழமை தூக்குக்கயிறு மாட்டி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  
விளைநிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் திட்டத்தை கைவிடக் கோரியும், சாலையோரங்களில் புதைவட முறையில் மின்சாரத்தை கொண்டுச் செல்ல மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியும், சேலம், நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள், வாழப்பாடியை அடுத்த சேசன்சாவடியில் கொட்டகை அமைத்து தங்கி, 8-ஆவது நாளாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஞாயிற்றுக்கிழமை முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், திங்கள்கிழமை தூக்குக் கயிறு மாட்டி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் கூறியது: விவசாய நிலங்களுக்கு மேல் உயர்மின் கோபுரங்கள் வழியாகச் செல்லும் மின்சாரம், கிழே வசிக்கும் விவசாயிகளுக்கு மரண பயத்தை ஏற்படுத்துகிறது. ஏற்கெனவே அமைத்த உயர்மின் கோபுரங்களுக்கே இன்னும் உரிய நிவாரணம் வழங்கவில்லை. இந்நிலையில் எட்டாவது நாளாக தொடர் காத்திருப்புப் போராட்டம் நடத்திய எங்களின் கோரிக்கை குறித்து கேட்பதற்கு கூட இந்த அரசு தயாராக இல்லை என்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.