மேட்டூர் காவிரிக் கரையில் நெல் படையலிட்டு வழிபாடு
மேட்டூர் அணை நிரம்ப வேண்டி காவிரிக் கரையில் நெல் படையலிட்டு ஞாயிற்றுக்கிழமை சிறப்புப் பூஜை நடைபெற்றது.


மேட்டூர் அணை நிரம்ப வேண்டி காவிரிக் கரையில் நெல் படையலிட்டு ஞாயிற்றுக்கிழமை சிறப்புப் பூஜை நடைபெற்றது.
தமிழ் மாநில காங்கிரஸ் விவசாய அணி சார்பில் அதன் மாநிலத் தலைவர் புலியூர் நாகராஜன் தலைமை வகித்தார். மாநில மருத்துவப் பிரிவு தலைவர் டாக்டர் ரகுநாதன் முன்னிலையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. மேட்டூர் காவிரி பாலத்தின் அடியில் தஞ்சையிலிருந்து கொண்டு வரப்பட்ட நெல்லை படையலிட்டு சிறப்புப் பூஜை செய்தனர். பின்னர் விதைநெல்லை காவிரியில் வீசி அணை நிரம்பி சம்பா சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்க காவிரித் தாயை வழிபட்டனர். மேட்டூர் நகர த.மா.கா. தலைவர் காமராஜ், மேற்கு மாவட்ட துணைத் தலைவர் தேவராஜ், மாநில விவசாய அணி செயலாளர் கார்த்திக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...