ஓமலூர் அருகே மூதாட்டியிடம் மூன்று பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
ஓமலூர் அருகேயுள்ள வேலக்கவுண்டனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜம்மாள் (60). கணவரை இழந்த இவர், அங்குள்ள தனியார் பள்ளியின் முன்பாக பெட்டிக்கடை வைத்துள்ளார். இவரது கடைக்கு சனிக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் தலைக்கசவம் அணிந்து வந்த மர்ம நபர்கள் இருவர், மூதாட்டி ராஜம்மாளிடம், மிக்சர், தண்ணீர் பாக்கெட், பிளாஸ்டிக் டம்ளர் கேட்டுள்ளனர். அவர்கள் கேட்ட பொருள்களை மூதாட்டி எடுத்துக் கொடுத்தபோது, அவர் கழுத்தில் அணிந்திருந்த மூன்று பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்றுவிட்டனர்.
புகாரின் பேரில் ஓமலூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







