தவெக என்ன செய்தது எனக் கேட்கும் எதிர்க்கட்சித் தலைவர் என்ன சுதந்திர போராட்டத் தியாகியா? அமைச்சர் ரமேஷ்அதிமுக மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்: தவெகவுக்கு இன்னும் பலர் வருவார்கள்: செங்கோட்டையன்இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன்
/

வாழப்பாடி இலக்கியப் பேரவையில் முப்பெரும் நினைவேந்தல் கூட்டம்

வாழப்பாடி இலக்கியப் பேரவையில், முன்னாள் முதல்வர் காமராஜர், கவிஞர் கண்ணதாசன்,  நடிகர் சிவாஜி கணேசன் ஆகியோருக்கு முப்பெரும் நினைவேந்தல் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. 

Updated On :23 ஜூலை 2018, 9:37 am IST

வாழப்பாடி இலக்கியப் பேரவையில், முன்னாள் முதல்வர் காமராஜர், கவிஞர் கண்ணதாசன்,  நடிகர் சிவாஜி கணேசன் ஆகியோருக்கு முப்பெரும் நினைவேந்தல் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. 
வாழப்பாடியில் சனிக்கிழமை நடைபெற்ற இலக்கியப் பேரவையின் முப்பெரும் நினைவேந்தல் கூட்டத்துக்கு,  ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் முருகாவரதராஜன் தலைமை வகித்தார்.  தாளாளர் செந்தில்குமார் வரவேற்றார். ஆசிரியர் முருகேசன், ஜெயசக்தி ஜவஹர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கண்ணதாசனும் சிவாஜியும் என்ற தலைப்பில் கவிஞர் பழனிவேலு, கர்மவீரர் காமராஜரின் கல்விநலம் என்ற தலைப்பில் கவிஞர் கணேசன், புலவர் கதிர்வேல், நடிகர் திலகத்தின் இளமைக்கால வரலாறு குறித்து ஆய்வறிஞர் சுப்பிரமணியன், சிவாஜி கணேசனின் கலைத்திறன் குறித்து ஆடிட்டர் குப்பமுத்து, முப்பெரும் ஆளுமைகள் குறித்து தமிழன் முத்துராமாராசா ஆகியோரும், கண்ணதாசன் யதார்த்தங்கள் குறித்து இலக்கியப் பேரவை செயலாளர் ஆசிரியர் சிவ.எம்கோ ஆகியோரும் விளக்கினர். 
இக்கூட்டத்தில், புலவர் செல்வக்குமார், மதியழகன், பாலுசாமி, தமிழ்சிறகு செந்தில்குமார், சரவணன், பழனிமுத்து உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  நிறைவாக, காமராஜர், கண்ணதாசன், சிவாஜி கணேசன் ஆகியோருக்கு கவிதாஞ்சலி செலுத்தப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.