வாழப்பாடி இலக்கியப் பேரவையில், முன்னாள் முதல்வர் காமராஜர், கவிஞர் கண்ணதாசன், நடிகர் சிவாஜி கணேசன் ஆகியோருக்கு முப்பெரும் நினைவேந்தல் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
வாழப்பாடியில் சனிக்கிழமை நடைபெற்ற இலக்கியப் பேரவையின் முப்பெரும் நினைவேந்தல் கூட்டத்துக்கு, ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் முருகாவரதராஜன் தலைமை வகித்தார். தாளாளர் செந்தில்குமார் வரவேற்றார். ஆசிரியர் முருகேசன், ஜெயசக்தி ஜவஹர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கண்ணதாசனும் சிவாஜியும் என்ற தலைப்பில் கவிஞர் பழனிவேலு, கர்மவீரர் காமராஜரின் கல்விநலம் என்ற தலைப்பில் கவிஞர் கணேசன், புலவர் கதிர்வேல், நடிகர் திலகத்தின் இளமைக்கால வரலாறு குறித்து ஆய்வறிஞர் சுப்பிரமணியன், சிவாஜி கணேசனின் கலைத்திறன் குறித்து ஆடிட்டர் குப்பமுத்து, முப்பெரும் ஆளுமைகள் குறித்து தமிழன் முத்துராமாராசா ஆகியோரும், கண்ணதாசன் யதார்த்தங்கள் குறித்து இலக்கியப் பேரவை செயலாளர் ஆசிரியர் சிவ.எம்கோ ஆகியோரும் விளக்கினர்.
இக்கூட்டத்தில், புலவர் செல்வக்குமார், மதியழகன், பாலுசாமி, தமிழ்சிறகு செந்தில்குமார், சரவணன், பழனிமுத்து உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிறைவாக, காமராஜர், கண்ணதாசன், சிவாஜி கணேசன் ஆகியோருக்கு கவிதாஞ்சலி செலுத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூன் 14 - நேரலை!

கீமோதெரபி மருந்துகள் எளிதில் கிடைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ்

அதிமுக மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்; தவெகவுக்கு இன்னும் பலர் வருவார்கள்! செங்கோட்டையன்

அடுத்த 10 ஆண்டுகளில் விண்வெளிப் பொருளாதாரம் 40-45 பில்லியன் டாலரை எட்டும்: மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


