மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

விழிப்புணர்வு கருத்தரங்கம்

ஆத்தூர் இந்திய மருத்துவச் சங்கம் நடத்திய பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் இந்திய

Updated On :23 ஜூலை 2018, 9:36 am IST

ஆத்தூர் இந்திய மருத்துவச் சங்கம் நடத்திய பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் இந்திய மருத்துவச் சங்கத் தலைவர் ஆர்.ரபீந்திரநாத் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் செயலாளர் எம்.அருண்குமார் வரவேற்றுப் பேசினார்.
நிகழ்ச்சியில் சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் எம்.திருநாவுக்கரசு கலந்து கொண்டு மனமே நலமா, மன நலத்தோடு வாழும்வழி, குழந்தைகள் மனநலம் மற்றும் வளர்ப்பு, மனநல மருத்துவரோடு ஒரு கலந்துரையாடல், குழந்தைகளை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள் என்ற தலைப்பில் சிறப்புரை வழங்கினார். இதில் 700 பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
மாலையில் ஆசிரியர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஆத்தூர் துளுவவேளாளர் சங்கத் தலைவர் ஆர்.வசந்தன், மருத்துவர் எம்.திருநாவுக்கரசுக்கு நினைவுப் பரிசு வழங்கினார்.  மருத்துவர்கள் ரத்தினக்குமார், கே.மாதவன், கே.சண்முகம், கே.சுப்ரமணி, மலர்க்கொடி, சத்ய ப்ரியா உள்ளிட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டனர். பொருளாளர் விஜயபாஸ்கர் நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.