சித்திரைத் திருவிழா: பச்சை பட்டு உடுத்தி வைகையில் இறங்கினார் கள்ளழகர்!6 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமீன் உற்பத்தி: இந்திய அளவில் தமிழகம் முதலிடம்2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!பாா்சல் சேவை: சென்னை ரயில்வே கோட்டம் புதிய சாதனை
/

சிறுமிக்கு பாலியல் தொல்லை: பெயிண்டருக்கு 5 ஆண்டு  சிறை

சேலத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த பெயிண்டருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

Updated On :29 மார்ச் 2018, 3:54 am

சேலத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த பெயிண்டருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
சேலம் மாவட்டம், காரிப்பட்டியைச் சேர்ந்தவர் பெயிண்டர் ராஜேந்திரன் (51) . இவர் 2016 ஆம் ஆண்டு 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். 
இந்த வழக்கு விசாரணை சேலம் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 
இந்தநிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி விஜயகுமாரி,  பெயிண்டர் ராஜேந்திரனுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் 
அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்குரைஞர் ஆர்.காந்திமதி ஆஜரானார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.