மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பங்குனி உத்திரம்: சேலம் கோட்டத்திலிருந்து பழனிக்கு  சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், சேலம் கோட்டம் மூலமாக சிறப்புப்  பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

Updated On :29 மார்ச் 2018, 3:52 am

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், சேலம் கோட்டம் மூலமாக சிறப்புப்  பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதுகுறித்து சேலம் கோட்ட மேலாண் இயக்குநர் மு.கஜேந்திரன் தெரிவித்துள்ளது:
வரும் மார்ச் 30 ஆம் தேதி பங்குனி உத்திரம்  மற்றும் பெளர்ணமி கிரிவலம் திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், சேலம்  மூலமாக மார்ச் 29 முதல் மார்ச் 31 வரை சேலம்  - பழனி (வழி) ஈரோடு  காங்கயம்,  நாமக்கல் - பழனி (வழி) கரூர், நாமக்கல் - பழனி (வழி) கொடுமுடி, சேலம், ஆத்தூர் (வழி) வடசென்னிமலை,  கள்ளக்குறிச்சி - வடசென்னிமலை,  தருமபுரி - பழனி, சேலம் - திருவண்ணாமலை ஆகிய வழித்தடங்களில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.  எனவே,  பயணிகள் அனைவரும் பயண நெரிசலைத் தவிர்த்து பயணம் செய்யலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.