மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

மஞ்சக்கல்பட்டியில்  சிறப்பு மனுநீதி திட்ட முகாம்

சங்ககிரி வட்டத்துக்குள்பட்ட மஞ்சக்கல்பட்டி கிராமத்தில் சிறப்பு மனுநீதி திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. 

Updated On :29 மார்ச் 2018, 3:53 am

சங்ககிரி வட்டத்துக்குள்பட்ட மஞ்சக்கல்பட்டி கிராமத்தில் சிறப்பு மனுநீதி திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. 
முகாமிற்கு  வட்டாட்சியர் கே.அருள்குமார் தலைமை வகித்து, 36 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா,  22 பேருக்கு புதிய குடும்ப அட்டை,   சிறு விவசாயிகள் சான்று, பட்டா மாறுதல் தலா ஒருவருக்கு என மொத்தம் 60 பயனாளிகளுக்கு வழங்கி, அரசின் நலத் திட்டங்கள் குறித்து பேசினார். பின்னர்  பொதுமக்கள் பட்டா மாறுதல், குடிநீர் வசதி,  விதவை சான்று கோருதல் உள்ளிட்ட 31 மனுக்களை அளித்தனர். 
முகாமில் சமூக நலத்துறை வட்டாட்சியர் செம்மலை,  வட்ட வழங்கல் அலுவலர் கோவிந்தராஜ்,  மண்டல துணை வட்டாட்சியர் சிவராஜ்,  வருவாய் ஆய்வாளர்,  கிராம நிர்வாக அலுவலர் மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 
முகாமில்  தேவண்ணகவுண்டனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் பொதுமக்களுக்கு கண் பரிசோதனை நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.