தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

9 வயது சிறுமி பலாத்காரம்: தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை

சேலம் எடப்பாடி அருகே 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், கல் உடைக்கும் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :14 மே 2018, 9:08 pm

DIN

சேலம் எடப்பாடி அருகே 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், கல் உடைக்கும் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே இருப்பாளி கிராமத்தைச் சேர்ந்த 9 வயது சிறுமியை, கல் உடைக்கும் தொழிலாளி ஈஸ்வரன் (31) கடந்த 2012-இல் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. இந்தப் புகாரின்பேரில் பூலாம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, ஈஸ்வரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதுதொடர்பான வழக்கு விசாரணை சேலம் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கில் அரசுத் தரப்பு வழக்குரைஞர் ஆர். காந்திமதி ஆஜராகி வாதாடி வந்தார். விசாரணை முடிவுற்ற நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி விஜயகுமாரி, குற்றம் சாட்டப்பட்ட ஈஸ்வரனுக்கு 10 ஆண்டுகள் சிறையும், ரூ. 25 ஆயிரம் அபராதமும் விதித்து திங்கள்கிழமை தீர்ப்பு வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.