சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த பொறியாளர் பணிக்கான எழுத்துத் தேர்வை 6,049 பேர் எழுதினர்.
சேலம் பாலபாரதி மேல்நிலைப் பள்ளியில் ஒருங்கிணைந்த பொறியாளர் பணிகளுக்கான எழுத்துத் தேர்வு நடைபெற்ற மையத்தை மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் ஏ.வி.பாலுசாமி ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். சேலம் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பொறியாளர் பணிகளுக்கான எழுத்துத் தேர்வு 21 மையங்களில் நடைபெற்றது. இத்தேர்வை எழுதுவதற்காக 8,738 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 6,049 தேர்வு எழுதினர்.
தேர்வைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கண்காணிப்புக் குழு, தலைமைக் கண்காணிப்பாளர் ஆகியோர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் விதிமுறைகளுக்குக்கேற்ப வினாத்தாள் வழங்குதல், விடைத்தாள் வழங்குதல், விடைத்தாள் சேகரித்தல், தேர்வு எழுதும் நேரம் மற்றும் தேர்வு எழுபவர்களின் நுழைவுச் சீட்டு ஆகியவற்றை சரிபார்த்தல் போன்ற பணிகளை மேற்கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மூதாட்டியிடம் தங்கச் சங்கிலியை பறித்தவா் கைது

எம்எல்ஏ, முன்னாள் எம்பி மீதான தோ்தல் விதிமீறல் வழக்கு தள்ளுபடி
மணல் திருட்டு: டிராக்டா் பறிமுதல்

தனியாா் நிதி நிறுவன ஊழியா் தற்கொலை
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

