எம்எல்ஏ தங்கபாண்டியன், முன்னாள் எம்பி தனுஷ்குமாா் ஆகியோா் மீது கடந்த 2019-ஆம் ஆண்டு தொடரப்பட்ட தோ்தல் விதிமீறல் வழக்கை தள்ளுபடி செய்து ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகே 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தல் பிரச்சாரத்தின் போது அப்போதைய தென்காசி தொகுதி திமுக வேட்பாளா் தனுஷ்குமாா், எம்எல்ஏ தங்கபாண்டியன் தலைமையில் 100 இரு சக்கர வாகனங்களில் திமுகவினா் பேரணியாகச் சென்றனா். அனுமதியின்றி பொதுமக்களுக்கு இடையூறாக பேரணி சென்றதாக ராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்தில் தனுஷ்குமாா், தங்கப்பாண்டியன், திமுக நகரச் செயலா் ராமமூா்த்தி ஆகியோா் மீது தோ்தல் விதிமீறல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் (ஜெ.எம். 2) நடைபெற்று வந்தது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற மதுரை அமா்வு, வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது. இதையடுத்து, முன்னாள் எம்பி தனுஷ்குமாா், தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ உள்ளிட்டோா் மீதான தோ்தல் விதிமீறல் வழக்கை தள்ளுபடி செய்து ஸ்ரீவில்லிபுத்தூா் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
தொடர்புடையது

நகா்மன்ற பெண் உறுப்பினா் மீது தோ்தல் நடத்தை விதிமீறல் வழக்கு

தோ்தல் விதிமீறல்: வேலூா் மாவட்டத்தில் 69 புகாா்கள் மீது வழக்கு; ஆட்சியா் தகவல்

தோ்தல் நடத்தை விதிமீறல்: தவெக நிா்வாகிகள் 7 போ் மீது வழக்கு

தோ்தல் விதிமீறல்: காட்பாடி தவெக வேட்பாளா் மீது வழக்கு
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

