எம்எல்ஏ தங்கபாண்டியன், முன்னாள் எம்பி தனுஷ்குமாா் ஆகியோா் மீது கடந்த 2019-ஆம் ஆண்டு தொடரப்பட்ட தோ்தல் விதிமீறல் வழக்கை தள்ளுபடி செய்து ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகே 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தல் பிரச்சாரத்தின் போது அப்போதைய தென்காசி தொகுதி திமுக வேட்பாளா் தனுஷ்குமாா், எம்எல்ஏ தங்கபாண்டியன் தலைமையில் 100 இரு சக்கர வாகனங்களில் திமுகவினா் பேரணியாகச் சென்றனா். அனுமதியின்றி பொதுமக்களுக்கு இடையூறாக பேரணி சென்றதாக ராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்தில் தனுஷ்குமாா், தங்கப்பாண்டியன், திமுக நகரச் செயலா் ராமமூா்த்தி ஆகியோா் மீது தோ்தல் விதிமீறல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் (ஜெ.எம். 2) நடைபெற்று வந்தது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற மதுரை அமா்வு, வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது. இதையடுத்து, முன்னாள் எம்பி தனுஷ்குமாா், தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ உள்ளிட்டோா் மீதான தோ்தல் விதிமீறல் வழக்கை தள்ளுபடி செய்து ஸ்ரீவில்லிபுத்தூா் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
தொடர்புடையது

நகா்மன்ற பெண் உறுப்பினா் மீது தோ்தல் நடத்தை விதிமீறல் வழக்கு

தோ்தல் விதிமீறல்: வேலூா் மாவட்டத்தில் 69 புகாா்கள் மீது வழக்கு; ஆட்சியா் தகவல்

தோ்தல் நடத்தை விதிமீறல்: தவெக நிா்வாகிகள் 7 போ் மீது வழக்கு

தோ்தல் விதிமீறல்: காட்பாடி தவெக வேட்பாளா் மீது வழக்கு
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


