பிறந்து 10 நாள்களே ஆன பச்சிளம் குழந்தையை பெண் ஒருவர் கோவை ரயில் நிலையத்தில் சனிக்கிழமை இரவு வீசிச் சென்றார்.
கோவை ரயில் நிலையத்தின் முதலாவது நடைமேடையில், பிறந்து 10 நாள்களே ஆன பச்சிளங் குழந்தையை ஒரு பெண் வீசிவிட்டுச் சென்றார். அப்போது அங்கிருந்த பயணிகள் அவரை விரட்டிப் பிடித்து ரயில்வே காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து காவல் துறையினர் கூறியதாவது:
ரயில் நிலையத்தில் குழந்தையை வீசிச் சென்ற பெண், சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்தவர். ஈரோட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்தபோது அங்கிருந்த இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே கணவன், மனைவியாக வாழ்ந்துள்ளனர்.
அந்தப் பெண் கர்ப்பம் அடைந்ததும் அந்த இளைஞர் அவரைக் கைவிட்டு கோவை வந்துவிட்டார். இந்நிலையில், கடந்த 10 நாள்களுக்கு முன்னர் அந்தப் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. எனவே, கைக்குழந்தையுடன் காதலனைத் தேடி கோவை வந்துள்ளார். அவரைக் கண்டுபிடிக்க முடியாத விரக்தியில், குழந்தையை ரயில் நிலையத்தில் கைவிட்டுச் செல்ல முயன்றுள்ளார் என்றனர். இதையடுத்து, அந்தக் குழந்தை மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளிடமும், அந்தப் பெண் காப்பகத்திலும் ஒப்படைக்கப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அடுத்த 2 மணி நேரத்துக்கு 10 மாவட்டங்களில் மழை!

30 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லைக்காளியம்மன் கோயில் தெப்போற்சவம்!
பெட்ரோல், டீசல் விலை ஒரே வாரத்தில் 2-வது முறை உயர்வு!

பணவரவு யாருக்கு? இன்றைய ராசி பலன்கள்!
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு
