பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

பச்சிளம் குழந்தையை ரயில் நிலையத்தில் வீசிச் சென்ற பெண்

பிறந்து 10 நாள்களே ஆன பச்சிளம் குழந்தையை பெண் ஒருவர் கோவை ரயில் நிலையத்தில் சனிக்கிழமை இரவு வீசிச் சென்றார். 

Updated On :8 அக்டோபர் 2018, 9:14 am IST

பிறந்து 10 நாள்களே ஆன பச்சிளம் குழந்தையை பெண் ஒருவர் கோவை ரயில் நிலையத்தில் சனிக்கிழமை இரவு வீசிச் சென்றார். 
கோவை ரயில் நிலையத்தின் முதலாவது நடைமேடையில், பிறந்து 10 நாள்களே ஆன பச்சிளங் குழந்தையை ஒரு பெண் வீசிவிட்டுச் சென்றார். அப்போது அங்கிருந்த பயணிகள் அவரை விரட்டிப் பிடித்து ரயில்வே காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து காவல் துறையினர் கூறியதாவது:
ரயில் நிலையத்தில் குழந்தையை வீசிச் சென்ற பெண், சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்தவர். ஈரோட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்தபோது அங்கிருந்த இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே கணவன், மனைவியாக வாழ்ந்துள்ளனர். 
அந்தப் பெண் கர்ப்பம் அடைந்ததும் அந்த இளைஞர் அவரைக் கைவிட்டு கோவை வந்துவிட்டார். இந்நிலையில், கடந்த 10 நாள்களுக்கு முன்னர் அந்தப் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. எனவே, கைக்குழந்தையுடன் காதலனைத் தேடி கோவை வந்துள்ளார். அவரைக் கண்டுபிடிக்க முடியாத விரக்தியில், குழந்தையை ரயில் நிலையத்தில் கைவிட்டுச் செல்ல முயன்றுள்ளார் என்றனர். இதையடுத்து, அந்தக் குழந்தை மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளிடமும், அந்தப் பெண் காப்பகத்திலும் ஒப்படைக்கப்பட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.