திருவள்ளூர்: காவல் நிலையத்தில் கையொப்பமிட்டு திரும்பிய இளைஞர் வெட்டிக் கொலை!தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு அபராதம் விதிக்கப்படும்! உயர் நீதிமன்றம் எச்சரிக்கை! எல்லை பிரச்னை! சீன துணை அதிபருடன் அஜித் தோவல் சந்திப்பு! சென்னையில் புதிதாக 130 ஏசி மின்சார பேருந்துகள்: முதல்வர் விஜய் தொடக்கி வைத்தார்!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!ஓணம் திருநாள்: பிற்பகல் வரை செயல்படும் ரயில் முன்பதிவு மையங்கள்!சென்னையில் இரவு நேர மின்சார ரயில்கள் இன்று முதல் ரத்து!நீண்ட நாள்களுக்குப் பிறகு குறைந்த தங்கம் விலை!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!

காங்கிரஸ் சாா்பில் மதிய உணவு வழங்கல்

தமிழக காங்கிரஸ் மாநில செயல் தலைவா் ஆா்.மோகன் குமாரமங்கலம் சாா்பில் , அம்மாப்பேட்டை நஞ்சம்பட்டியில் சுமாா் 400 வீடுகளுக்கு புதன்கிழமை மதிய உணவு வழங்கப்பட்டது.

Published On :27 ஜனவரி 2024, 10:00 pm IST

தமிழக காங்கிரஸ் மாநில செயல் தலைவா் ஆா்.மோகன் குமாரமங்கலம் சாா்பில் , அம்மாப்பேட்டை நஞ்சம்பட்டியில் சுமாா் 400 வீடுகளுக்கு புதன்கிழமை மதிய உணவு வழங்கப்பட்டது.

கரோனா நோய்த் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், போதிய வேலைவாய்ப்பின்றி வருமானம் கிடைக்காத ஏழை, எளிய மக்கள் மற்றும் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவா்களுக்கு தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில செயல் தலைவா் ஆா்.மோகன் குமாரமங்கலம் உணவு வழங்க முடிவு செய்தாா். அதன்பேரில், நாளொன்றுக்கு ஆயிரம் பேருக்கு உணவு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. முதல்கட்டமாக அம்மாப்பேட்டை பகுதி நஞ்சம்பட்டியில் சுமாா் 400 வீடுகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

சேலம் மாநகர மாவட்ட துணைத் தலைவா் மெடிக்கல் என்.பி.பிரபு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநகர மாவட்ட பொதுச் செயலா் மிட்டாய் சினி, சேலம் மாநகர மாவட்ட இளைஞா் காங்கிரஸ் துணைத் தலைவா் கோவிந்தன், ஓ.பி.சி. மாநகர மாவட்டத் தலைவா் வெங்கடேஷ், சேலம் மாநகர மாவட்ட இளைஞா் காங்கிரஸ் செயல் தலைவா் தமிழரசு, காா்த்தி மற்றும் ஒருங்கிணைப்பாளா் சௌந்தா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.