கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

சங்ககிரியில் கருணாநிதி நினைவு நாள்

திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி நினைவு நாளையொட்டி சங்ககிரியில் பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு அரிசி, காய்கறிகள் வழங்கப்பட்டது.

News image

பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு அரிசி, காய்கறிகள் வழங்கல்

Updated On :7 ஆகஸ்ட் 2020, 1:17 pm

DIN

திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி நினைவு நாளையொட்டி சங்ககிரியில் பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு அரிசி, காய்கறிகள் வழங்கப்பட்டது.

திமுக முன்னாள் தலைவர் மு.கருணாநிதியின் நினைவு தினத்தினையொட்டி சங்ககிரி நகர திமுக சார்பில் சங்ககிரி பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு அரிசி, காயற்கறிகள் வழங்கும் நிகழ்ச்சி பேரூராட்சி அலுவலக வளாக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. 

திமுக முன்னாள் தலைவர்  மு.கருணாநிதியின் நினைவுதினத்தினையொட்டி சங்ககிரி நகர திமுக சார்பில் பேரூராட்சிக்குள்பட்ட 18 வார்டுகளிலும் நிர்வாகிகள் முன்னாள் தலைவர் மு.கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினர். பின்னர் நகர செயலர் எல்ஐசி சுப்ரமணியம் சார்பில்  பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் 80 பேருக்கு தலா ஐந்து கிலோ அரிசி, காய்கறிகள் கொண்ட பைகளை சேலம் மேற்கு மாவட்டச் செயலர் (பொ) டி.எம்.செல்வகணபதி தலைமை வகித்து வழங்கினார். 

சங்ககிரி ஒன்றியச் செயலர் (பொ)கே.எம்.ராஜேஷ், மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ்.பி.நிர்மலா, முன்னாள் ஒன்றியச் செயலர் பி.தங்கமுத்து, முன்னாள் நகரச் செயலர் கே.எம்.முருகன், முன்னாள் பேரூராட்சி செயலர் செல்வராஜ் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.