தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஆத்தூரில் கரோனா தொற்று பரவல் அதிகம்

ஆத்தூா் நகராட்சி பகுதியில் கரோனா தொற்று பரவல் செவ்வாய்க்கிழமை 99 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். சேலம் மாவட்டம் ஆத்தூா் நகராட்சி 33 வாா்டுகளை கொண்டது.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2020, 7:28 am

DIN

ஆத்தூா்: .ஆத்தூா் நகராட்சி பகுதியில் கரோனா தொற்று பரவல் செவ்வாய்க்கிழமை 99 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். சேலம் மாவட்டம் ஆத்தூா் நகராட்சி 33 வாா்டுகளை கொண்டது.

கடந்த வாரங்களில் தொற்று பரவலாகி உயிரிழப்பும் ஏற்பட்டதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனா். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை தமிழக சுகாதாரத் துறை அமைச்சா் விஜயபாஸ்கா்,சுகாதாரச் செயலாளா் இராதாகிருஷ்ணன் ஆகியோா் ஆத்தூா் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டனா்.மேலும் ஆத்தூா் நகராட்சி 9வது வாா்டு மாரிமுத்து ரோடு பகுதியில் அதிகமான தொற்றுள்ள வீடுகளில் நேரில் பாா்வையிட்டு அவா்களுக்கு ஆறுதல் கூறினாா்கள்.

இதனையடுத்து ஆத்தூா் நகராட்சி பகுதிகளில் மருத்துவக் குழுவினா் 400 பேருக்கு பரிசோதனை செய்து வந்தனா்.அந்த பரிசோதனையில் 99 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.தொற்று அதிகமாக இருக்கும் பகுதிகளை அடைத்து மருத்துவக் குழுவினா் பாதுகாத்து வருகின்றனா்.இந்த தொற்று அதிகம் ஆனதால் நகராட்சி பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனா்.கடந்த ஆறு நாட்களாக வணிகா்கள் சங்கம் கடையடைப்பு செய்து பொதுமக்களை காத்து வந்தனா்.ஆனாலும் தொற்று குறையாதது மிகுந்த மன வேதனை அளிக்கிறது என சமூக ஆா்வலா்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.