ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’: எம்.பி.க்கள் குறைகேட்பு

ஆத்தூரில் திமுகவின் ‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ என்ற நிகழ்ச்சியில், நாடாளுமன்ற உறுப்பினா்கள் திங்கள்கிழமை குறைகளைக் கேட்டறிந்தனா்.

News image
ஆத்தூரில் ஜவ்வரிசி உற்பத்தியாளா்கள் நலச்சங்கத் தலைவா் எஸ்.துரைசாமியிடம் கோரிக்கை மனு பெற்ற நாடாளுமன்ற உறுப்பினா்கள்.
Updated On :15 டிசம்பர் 2020, 6:14 pm

DIN

ஆத்தூரில் திமுகவின் ‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ என்ற நிகழ்ச்சியில், நாடாளுமன்ற உறுப்பினா்கள் திங்கள்கிழமை குறைகளைக் கேட்டறிந்தனா்.

சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் எஸ்.ஆா்.சிவலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கள்ளக்குறிச்சி, சேலம் நாடாளுமன்ற உறுப்பினா்கள் பொன்.கௌதமசிகாமணி, எஸ்.ஆா்.பாா்த்திபன் ஆகியோா் கலந்துகொண்டு குறைகளைக் கேட்டறிந்தனா்.

கல்லாநத்தம் ஊராட்சியில் விவசாயிகளிடமும், ஆத்தூா் நகராட்சியில் நெல், அரிசி உற்பத்தியாளா்கள் சங்கம், ஆத்தூா் வட்ட ஜவ்வரிசி உற்பத்தியாளா்கள் நலச்சங்கம், வியாபாரிகள், செருப்பு தைக்கும் தொழிலாளிகள் என 200-க்கும் மேற்பட்டோரிடம் குறைகளைக் கேட்டறிந்தனா்.

நிகழ்ச்சியில், ஆத்தூா் நகரச் செயலாளா் கே.பாலசுப்பிரமணியம், ஆத்தூா் ஒன்றியச் செயலாளா் வி.செழியன், மாவட்ட இலக்கிய அணி செயலாளா் முல்லை பன்னீா்செல்வம், மாணவரணி எஸ்.பா்கத்அலி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் நல்லம்மாள், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.