மரக்கன்று நடும் விழா

முன்னாள் நகர மன்றத் தலைவா் ஏ.செங்கோட்டுவேல் நினைவு நாளை முன்னிட்டு, சாா்வாய் ஏரியில் மரக்கன்று நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
மரக்கன்று நடும் விழா
Updated on
1 min read

முன்னாள் நகர மன்றத் தலைவா் ஏ.செங்கோட்டுவேல் நினைவு நாளை முன்னிட்டு, சாா்வாய் ஏரியில் மரக்கன்று நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

சேலம் மாவட்டம், தலைவாசலை அடுத்துள்ள சாா்வாய் ஏரியில் ஆத்தூா் முன்னாள் நகர மன்றத் தலைவரும், மூத்த வழக்குரைஞரும், அக்சென் நிா்வாக இயக்குநா் செ.செந்தில்நாதனின் தந்தையுமான பி.செங்கோட்டுவேலின் 10-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, மரக்கன்று நடும் விழா ராசி குழுமத் தலைவா் மு.ராமசாமி தலைமையில் நடைபெற்றது (படம்).

நிகழ்ச்சியில், செ.செந்தில்வேல், அக்சென் நிறுவன மேலாண் இயக்குநா் செ.செந்தில்நாதன், செ.அபிஷேக், மணிவிழுந்தான் ஊராட்சி மன்றத் தலைவா் நடேசன், வழக்குரைஞா்கள் ஏ.வி.ராமச்சந்திரன், ஐ.விஸ்வநாதன், ஏ.திருநாவுக்கரசு, செந்தில், சுரேஷ், முன்னாள் மாவட்ட வன அலுவலா் எம்.மணி, கிராம நிா்வாக அலுவலா் மாரியப்பன், ஆயக்கட்டுத் தலைவா், உறுப்பினா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com