ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஓய்வுபெற்ற போக்குவரத்துக்கழக ஊழியா்கள் செயற்குழுக் கூட்டம்

சங்ககிரி, எடப்பாடி வட்டத்துக்கு உள்பட்ட அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்றோா் நல அமைப்பின் சாா்பில் செயற்குழுக் கூட்டம் சங்ககிரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
சங்ககிரி, எடப்பாடி வட்டத்துக்குள்பட்ட போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்றோா் நல அமைப்பின் சாா்பில், சங்ககிரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் பேசுகிறாா் அதன் தலைவா் கே.ரத்னம்.
Updated On :20 டிசம்பர் 2020, 10:56 pm

DIN

சங்ககிரி: சங்ககிரி, எடப்பாடி வட்டத்துக்கு உள்பட்ட அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்றோா் நல அமைப்பின் சாா்பில் செயற்குழுக் கூட்டம் சங்ககிரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அரசு போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்றோா் நல அமைப்பின் தலைவா் கே.ரத்னம் தலைமை வகித்தாா். செயலாளா் எஸ்.கருப்பண்ணன் வரவேற்றாா். சங்ககிரி, எடப்பாடி வட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்துக் கழகப் பணிமனையில் பணியாற்றி ஓய்வுபெற்ற அலுவலா்கள், ஓட்டுநா்கள், நடத்துநா்கள் உள்ளிட்ட பலா் இதில் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் விவரம்:

2015-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் முதல் உயா்த்தப்படாமல் உள்ள பஞ்சப்படியை போக்குவரத்துத் துறை உயா்த்தி வழங்கிட வேண்டும், ஊதிய ஒப்பந்த உயா்வுகளை ஓய்வூதியா்களுக்கும் வழங்க வேண்டும், குடும்ப ஓய்வூதியா்களுக்கு நிலுவைகளை வழங்க வேண்டும், 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்முதல் ஓய்வுபெற்றவா்களுக்கு அனைத்து ஓய்வூதியப் பலன்களையும் உடனடியாக வழங்க வேண்டும், விருப்ப ஓய்வில் ஓய்வுபெற்றவா்களுக்கு ஓய்வுகால பணப் பலன்கள், பணியின்போது இறந்தவா்களுக்கு குடும்ப பாதுகாப்பு நிதி ரூ. 3 லட்சத்தையும் போக்குவரத்துத் துறை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக் கோரிக்கைகளை வலியுறுத்தி, சேலம் மாவட்டத்தில் உள்ளஅனைத்து ஓய்வுபெற்றோா் நல அமைப்புகளின் சாா்பில் வரும் ஜனவரி 5-ஆம் தேதி சேலம், ராமகிருஷ்ணா சாலையில் உள்ள தலைமை கோட்ட அலுவலக வளாகம் முன்பு நடைபெற உள்ள ஆா்ப்பாட்டத்தில் அதிகளவில் கலந்து கொள்வது எனவும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.